search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி அம்மன் ஆலயம்"

    • பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
    • முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபா ளையத்து பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும்தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவுர்ணமி சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    இரவு 7 மணிக்கு பால், தயிர், சந்தனம், தேன், குங்குமம் உள்பட 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரிகார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம் படி கருப்பசாமி, பவானி பத்திரகாளி அம்மன்,மகா காளியம்மன், பேச்சி யம்மன்களுக்கு பாலா பிஷேகம் நடை பெற்றது.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அல ங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இரவு 8.30 மணியளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை க்கான ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • விழாவை முன்னிட்டு பவானி அம்மாக்களுக்கு உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
    • குருநாதர் சத்தியம்மா பெண் உருவத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி பூஜை திருவிழா நடைபெற்றது.

    31-வது ஆண்டாக நடைபெறும் இந்த பூஜை திருவிழாவை முன்னிட்டு குருநாதர் சக்தியம்மா தனது சிறுவயதில் அருள் வாக்கு பலித்ததற்காக சென்னையில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன் தனது நாவினில் குடிகொண்ட நாளையே மகாபெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு சிறப்பு பால், தயிர், தேன்,சந்தனம், குங்குமம் உள்பட 21 வகையான நறுமண பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது. வருடம் தோறும் இந்நாளில் குருநாதர் சத்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் அக்னி சட்டியுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கினார்.

    குருநாதர் சக்தியம்மா பெண் வேடத்தில் அருள் வாக்கு கொடுக்கும் இந்நாளில் பக்தர்கள் குருநாதர் சக்தியம்மா விற்கு சேலை எடுத்து கொடுக்கும் போது நமக்கு வாழ்வில் அனைத்து நலமும் கிடைக்கும், மேலும் பக்தர்களுக்கு கொடுக்கும் அருள்வாக்கு ஒரு வருடத்திற்குரிய பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அன்னதானம் நடைபெற்றது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • முப்பெரும்தேவியருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • வருகிற 2-ந்தேதி பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெறும்.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நாகக் கன்னியம்மன், பெரிய பாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன் கோவிலில் சித்திரைப் திருவிழாவிற்கு நாள் கால் நட்டுதல் நிகழ்ச்சி இன்று குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும்தேவியர் அம்மாக்களுக்கு சந்தனம், குங்குமம், தயிர், பால், இளநீர் நறுமணப் பொருட்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின் சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம் படி கருப்பசாமி, மகாகாளி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து அக்னிச்சட்டி, பால்குடம், தீர்த்த குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய திருவிழாவான வருகிற 2-ந்தேதி காலை 7 மணிக்கு பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெறும்.

    காலை 8 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் பக்தர்கள் அக்னிச்சட்டி, அக்னி காவடி, அலகு குத்துதல் நடைபெற இருக்கிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணி அளவில் சிறப்பு அன்ன தானம் நடைபெறுகிறது. 3-ந்தேதி அதிகாலை 6 மணி அளவில் கோவில் முன்பு பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மாலை 6 மணி முதல் முளைப்பாரி கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா ஆந்திரா கர்நாடகா மும்பை ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×