search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
    X

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

    • பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
    • முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபா ளையத்து பவானி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும்தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவுர்ணமி சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    இரவு 7 மணிக்கு பால், தயிர், சந்தனம், தேன், குங்குமம் உள்பட 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் மற்றும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பரிகார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம் படி கருப்பசாமி, பவானி பத்திரகாளி அம்மன்,மகா காளியம்மன், பேச்சி யம்மன்களுக்கு பாலா பிஷேகம் நடை பெற்றது.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அல ங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இரவு 8.30 மணியளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை க்கான ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×