search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறக்கும் வேல் காவடி"

    • 19-ந்தேதி இரவு 7 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதலும் நடந்தது.
    • திருச்செந்தூர் முருகனுக்கு வேல், புஷ்ப காவடி விழாக்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடந்தது.

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனுக்கு வேல், புஷ்ப காவடி விழாக்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடந்தது.

    19-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோம மும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதலும் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னிசையும், மாலை நையாண்டிமேளமும், வேல்தரித்தலும், இரவு 7.30 மணிக்கு காவடி பெரும் பூஜையும், அன்னதானமும், காவடி அலங்காரமும் நடந்தது.

    21-ந்தேதி காலை தீபாராதனையும், காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி, பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந் தது. மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு வேல்காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ள மோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் சென்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனுக்கு வேல் காவடி, புஷ்ப காவடி
    • மாலை 4 மணிக்கு வேல் காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்படும்

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனுக்கு வேல் காவடி, புஷ்ப காவடி விழாக்கள் (இன்று) 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது.

    இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடை பெற்றது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதலும் நடக்கிறது. 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னி சையும், மாலை 5.30 மணிக்கு நையாண்டி மேளமும், மாலை 6 மணிக்கு வேல் தரித்தலும், இரவு 7.30 மணிக்கு காவடி பெரும் பூஜையும், இரவு 8.30 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு காவடி அலங்காரமும் நடக்கிறது.

    21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழ மை) காலை 7 மணிக்கு தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடக்கிறது.

    மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு வேல் காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவா ளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ள மோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் செல்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    ×