search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி புறப்பட்டு சென்றது
    X

    மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி புறப்பட்டு சென்றது

    • 19-ந்தேதி இரவு 7 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதலும் நடந்தது.
    • திருச்செந்தூர் முருகனுக்கு வேல், புஷ்ப காவடி விழாக்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடந்தது.

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனுக்கு வேல், புஷ்ப காவடி விழாக்கள் கடந்த 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடந்தது.

    19-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோம மும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதலும் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னிசையும், மாலை நையாண்டிமேளமும், வேல்தரித்தலும், இரவு 7.30 மணிக்கு காவடி பெரும் பூஜையும், அன்னதானமும், காவடி அலங்காரமும் நடந்தது.

    21-ந்தேதி காலை தீபாராதனையும், காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி, பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந் தது. மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு வேல்காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ள மோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் சென்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×