search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசுத்த திருக்குடும்ப ஆலயம்"

    • பொதுக்கூட்டத்துக்கு மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் நெல்சன் தலைமை தாங்கினார்.
    • 3-ம் திருவிழா மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே மேலராமன்புதூரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 3-ம் திருவிழா மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் நெல்சன் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் டேவிட்சன், மேலராமன்புதூர் ஊர் தலைவர் கென்னடி வாழ்த்துரை வழங்கினர். ஒய்ஸ்மேன் கிளப் குமரி மாவட்ட கவர்னர் பால்டுவின் புரூஸ், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுனர் ஜெஸ்டின் பால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    ஆலயத்தின் பங்குத்தந்தை மரிய வின்சென்ட் சூசை ஆசியுரை வழங்க சங்கத்தின் துணை தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை வியாபாரிகள் சங்க பொருளாளர் சகாய பிரைட்சிங் மற்றும் ராபின் தொகுத்து வழங்கினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நாளை மறுநாள் (30-ந்தேதி) 9-ம் திருவிழாவை முன்னிட்டு பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.

    • மறை க்கல்வி மன்ற ஆண்டு விழா, மாபெரும் இன்னிசை விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
    • ஆலயம் வண்ண விளக்குகளாலும், அழகு தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மேலராமன்புதூரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திரு விழா நேற்று மாலை திரு கொடியேற்றம் மற்றும் திருவிழா திருப்பலியுடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்.

    விழாவில் பங்குத்தந்தை மரிய சூசை வின்சென்ட், ஊர் தலைவர் ஏ.ஆர்.கென்னடி, பொருளாளர் ஆல்பர்ட், செயலாளர் எட்வின் ஜோ, தணிக்கை யாளர் விபின் ராஜ் மற்றும் நிர்வாக குழுவினர், பங்கு சபை உறுப்பினர்கள், ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இன்று 2-ம் நாள் திரு விழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், தொடர்ந்து மறையுரை, பொதுக்கூட்டம், கலை நிக ழ்ச்சிகள் ஆகியவை நடக்கி றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள், இன்னிசை விருந்துகள், சிறப்பு பட்டிமன்றம், பொதுக்கூ ட்டம், இளைஞர் இயக்கம் நடத்தும் நடன போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. வருகிற 30-ந்தேதி 9-ம் நாள் நிகழ்ச்சியாக காலை 9.30 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலியும், தொடர்ந்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் மாபெரும் சமபந்தி விருந்தும் நடைபெறுகிறது.

    வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி 10-ம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 3.30 மணிக்கு தேர் பவனி நிகழ்ச்சியும், தேர் திருப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சியும், தொடர்ந்து பங்கு நிர்வாக சிறப்பு பொதுக்கூட்டம், மறை க்கல்வி மன்ற ஆண்டு விழா, மாபெரும் இன்னிசை விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழாவையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளாலும், அழகு தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    ×