search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அருகே மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலயத்தில் சமபந்தி விருந்து
    X

    நாகர்கோவில் அருகே மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலயத்தில் சமபந்தி விருந்து

    • பொதுக்கூட்டத்துக்கு மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் நெல்சன் தலைமை தாங்கினார்.
    • 3-ம் திருவிழா மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே மேலராமன்புதூரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 3-ம் திருவிழா மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் நெல்சன் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் டேவிட்சன், மேலராமன்புதூர் ஊர் தலைவர் கென்னடி வாழ்த்துரை வழங்கினர். ஒய்ஸ்மேன் கிளப் குமரி மாவட்ட கவர்னர் பால்டுவின் புரூஸ், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுனர் ஜெஸ்டின் பால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    ஆலயத்தின் பங்குத்தந்தை மரிய வின்சென்ட் சூசை ஆசியுரை வழங்க சங்கத்தின் துணை தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை வியாபாரிகள் சங்க பொருளாளர் சகாய பிரைட்சிங் மற்றும் ராபின் தொகுத்து வழங்கினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நாளை மறுநாள் (30-ந்தேதி) 9-ம் திருவிழாவை முன்னிட்டு பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.

    Next Story
    ×