என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனாரஸ்"

    • மலிவான புடவைகளில் செயற்கை ஜரிகை அல்லது ரோமன் ஜரிகை பயன்படுத்தப்பட்டிருக்கும்.
    • ஜரிகை வேலைப்பாடு அடர்த்தியாகவும், கலைநயத்துடனும் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.

    பட்டுச் சேலைகளில் காஞ்சிபுரத்தைப் போல, பனாரசுக்கும் தனி மதிப்பு உண்டு. சரி, அசல் பனாரஸ் பட்டுச் சேலையை அறிவது எப்படி?

    பட்டு நூலின் தரம்:

    ஒரு பனாரஸ் சேலையின் தரம், அதன் பட்டு நூலின் தரத்தைப் பொறுத்தது. உண்மையான பனாரஸ் புடவைகள் தூய மல்பெரி பட்டு நூலில் நெய்யப்படுகின்றன. மல்பெரி பட்டு மென்மையாகவும், பளபளப்பாகவும், பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாகவும் இருக்கும்.

    தூய பட்டு மென்மையாகவும், வழுவழுப்புடனும் இருக்கும். அசல் பட்டுக்கு ஓர் இயற்கையான பளபளப்பு இருக்கும்.

    பட்டுப்புடவையின் ஒரு சிறிய நூல் பகுதியை எடுத்து மெதுவாக எரிக்கவும். தூய பட்டு எரிந்தால், முடி கருகும் வாசனை வரும். செயற்கைப்பட்டு என்றால் பிளாஸ்டிக் எரிவது போல வாசனை வரும்.

    ஜரிகையின் நேர்த்தி :

    பனாரஸ் புடவைகளின் தனிச்சிறப்பு, அவற்றின் ஜரிகை வேலைப்பாடுதான். இந்த ஜரிகை பெரும்பாலும் தங்கம் அல்லது வெள்ளி இழைகளால் நெய்யப் பட்டிருக்கும்.

    உண்மையான பனாரஸ் புடவைகளில் பயன்படுத்தப்படும் ஜரிகை, தூய வெள்ளி இழைகளின் மீது தங்க முலாம் பூசப்பட்டு அல்லது செப்பு இழைகளின் மீது தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும்.

    மலிவான புடவைகளில் செயற்கை ஜரிகை அல்லது ரோமன் ஜரிகை பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜரிகை வேலைப்பாடு அடர்த்தியாகவும், கலைநயத்துடனும் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.

     

    உண்மையான கைத்தறி பனாரஸ் பட்டுப்புடவைகளில், முன்புறத்தில் உள்ள அதே வடிவமைப்பு, பின்புறத்திலும் தெரியும்.

    நெசவு நுட்பம் மற்றும் வடிவமைப்பு :

    பனாரஸ் பட்டுப் புடவைகள் தனித்துவமான கைத்தறி நெசவு நுட்பத்துக்காக அறியப்படுகின்றன. வடிவமைப்புகள் புடவையில் நேரடியாக நெய்யப்பட்டிருக்கும்.

    தறியில் நெய்யப்பட்டிருந்தால் அவை மெஷின் வேலைப்பாடு போல் இல்லாமல், சற்று ஒழுங்கற்ற அல்லது கையால் செய்யப்பட்டதன் அடையாளத்தைக் கொண்டிருக்கும்.

    அசல் பனாரஸ் பட்டுப்புடவைகளில் 'ஜலா' அல்லது 'ஜாக்கார்டு' தறி மூலம் நெய்யப்படும் சிக்கலான வடிவங்கள் காணப்படும்.

    இவை பொதுவாக முந்தானையிலும், பார்டர்களிலும் பிரதானமாக இருக்கும்.

    புடவையின் எடை, அடர்த்தி:

    தூய பட்டு மற்றும் அடர்த்தியான ஜரிகை வேலைப்பாடுகள் காரணமாக, உண்மையான பனாரஸ் புடவைகள் மற்ற பட்டுப் புடவைகளை விட சற்றே கனமாக இருக்கும்.

    புடவையை கையில் எடுத்துப் பாருங்கள். அப்போது கனமாக உணர்ந்தால், அது உண்மையான பட்டு மற்றும் ஜரிகையை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதிக எடை, பயன்படுத்தப்படும் பட்டு மற்றும் ஜரிகையின் அளவைக் குறிக்கும்.

    துணியை தொட்டுப் பார்த்தால், அது அடர்த்தியாகவும், இறுக்கமாகவும் நெய்யப்பட்டிருப்பதைக் காணலாம். தரம் குறைந்த புடவைகள் மெல்லியதாகவும், தளர்வாகவும் இருக்கும்.

    விலை, சான்றிதழ்:

    பனாரஸ் புடவைகள் தயாரிப்பதற்கு அதிக நேரம், நுட்பமான வேலைப்பாடு மற்றும் உயர்தர மூலப்பொருட்கள் தேவைப்படுவதால், அவற்றின் விலை சற்றே அதிகமாக இருக்கும்.

    மலிவான விலையில் கிடைக்கும் புடவைகள் பெரும்பாலும் கலப்படமாகவோ அல்லது செயற்கைப்பட்டுடன் கூடியவையாகவோ இருக்கும்.

    இந்திய அரசின் சில்க் மார்க் சான்றிதழ், புடவையின் தரத்தை உறுதிப்படுத்தும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, நம்பகமான கடைகளில் மட்டுமே பனாரஸ் பட்டுப் புடவைகளை வாங்குவது சிறந்தது.

    • அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டுச் சென்றார்.
    • பெண்கள், குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    போர்ட் லூயிஸ்:

    மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தினவிழா நாளை (மார்ச் 12ம் தேதி ) நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் சென்றுள்ளார்.

    மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், இன்று மாலை மொரிஷியஸ் அதிபர் தரம் கோகூலின் மனைவிக்கு சடேலி பெட்டியில் பனாரசி பட்டுப் புடவையை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்தார்.

    வாரணாசியில் இருந்து வந்த பனாரசி புடவை, ஆடம்பர மற்றும் கலாசார பாரம்பரியத்தின் அடையாளமாகும். அதன் நேர்த்தியான பட்டு ஆடம்பரமான ஜரிகை வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.

    இந்த நேர்த்தியான புடவை வெள்ளி ஜரிகை மையக்கருக்கள், ஒரு பரந்த ஜரிகை பார்டர் மற்றும் ஒரு விரிவான பல்லு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

    இந்தப் புடவைக்கு துணையாக குஜராத்தில் இருந்து வந்த சடேலி பெட்டி உள்ளது. இது விலைமதிப்பற்ற புடவைகள், நகைகள் அல்லது நினைவுப் பொருட்களை சேமிக்க வடிவமைக்கப்பட்ட சிக்கலான உள் வேலைப்பாடுகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.
    • இந்த படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.


    பனாரஸ் புரொமோஷன் நிகழ்ச்சி

    இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.


    பனாரஸ் புரொமோஷன் நிகழ்ச்சி

    இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது. காசியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பனாரஸ் புரொமோஷன் நிகழ்ச்சி

    இதையடுத்து, 'பனாரஸ்' படக்குழு தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர்  ஜையீத் கான் பேசியதாவது, ''பனாரஸ்' படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இயக்குனர் ஜெயதீர்த்தா எனக்காக ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம். ஒவ்வொருவரும் இந்த படத்தைப் பார்த்து என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

    • இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.
    • இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.

    இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.


    பனாரஸ்

    இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.

    இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், நாயகன் ஜையீத் கான், கதாநாயகி சோனல் மாண்டீரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.


    பனாரஸ் படக்குழு

    இதில் இயக்குனர் ஜெய தீர்த்தா பேசியதாவது  "இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது ஜானர் கதைகளைத்தான் எடுத்து வந்துள்ளேன். அதனால் எனக்கு நிரந்தர ரசிகர்கள் இல்லை.

    இந்த 'பனாரஸ்' படமும் அப்படிப்பட்ட ஒரு ஜானர் வகையறா படம்தான். இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளி வந்துள்ளோம். இது ஒரு யூனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்' என்றார்.

    • இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.


    பனாரஸ்

    இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.


    பனாரஸ்

    இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.

    காசியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. 'பனாரஸ்' திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.
    • இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.


    பனாரஸ்

    இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

    இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.


    பனாரஸ் போஸ்டர்

    காசியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பனாரஸ்' திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி முதல் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.
    • இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.

    இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

    இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.

    பனாரஸ் படக்குழு

    இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் ஜெய தீர்த்தா பேசுகையில், ''பனாரஸ் படத்திற்கு முன்பாக கன்னடத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் வெளியான 'பெல்பாட்டம்' படத்தை தமிழில் இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்து வருகிறார்.

    என்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் படம், தமிழ் ரசிகர்களின் முன்னிலையில் தான் விருதினை பெற்றது. அந்த வகையில் சிறந்த திறமையாளர்களை கண்டறிந்து ஊக்குவிப்பதில் தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள். இதற்காக நான் பெருமிதம் அடைகிறேன்'' என்றார்.

    ×