search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணித்தேர்வு பட்டியல்"

    • திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிக்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிகண்ணன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள். தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் தெரிவித்தார்கள்.

    15-வது நிதிக்குழு மானியத்தில் வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை சில கவுன்சிலர்கள் பணிகளை தேர்வு செய்து வழங்காமல் உள்ளனர். 60 நாட்களுக்குள் பணித்தேர்வு பட்டியலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இருக்கின்ற பணித்தேர்வு பட்டியலை கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டு நிறைவேற்றவும், விடுபட்ட பணித்தேர்வு பட்டியலை அடுத்த கூட்டத்தில் வைத்து நிறைவேற்றலாம் என்று விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் பணித்தேர்வு பட்டியலை விரைந்து கொடுக்க மாவட்ட ஊராட்சி தலைவர் வலியுறுத்தினார்.

    ×