search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டியில் புகுந்து"

    • சம்பவத்தன்று இரவு பட்டியல் ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு சந்திரசேகர் அங்கு வந்து பார்த்தார். அப்பொழுது 2 வாலிபர்கள் ஆட்டுப்பட்டியில் ஆடுகளை திருட முயன்றனர்.
    • இதனையடுத்து 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சை க்கிளையும் சிவகிரி போவீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே மின்ன பாளையத்தை அடுத்த மொசுக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (42). விவசாயி. அதே பகுதியில் அவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் 15 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு யாரோ மர்ம நபர்கள் சந்திரசேகர் பட்டியில் இருந்த 2 ஆடுகளை திருடி சென்று விட்டனர். மேலும் ஆடுகள் திருட்டு போகாமல் இருக்க இரவு, பகலாக ஆடுகள் கட்டி வைத்திருக்கும் பட்டியை கண்காணித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பட்டியல் ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு சந்திரசேகர் அங்கு வந்து பார்த்தார். அப்பொழுது 2 வாலிபர்கள் ஆட்டுப்பட்டியில் ஆடுகளை திருட முயன்றனர்.

    அப்போது சந்திரசேகர் வருவதை கண்டு 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.

    அப்பொழுது அந்த 2 வாலிபர்களை சந்திரசேகர் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரித்ததில், பாசூர் சோளங்காபாளையம் மணப்பாளிபள்ளம் 2-வது வீதியை சேர்ந்த சிவானந்தன் (20), அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (19) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சை க்கிளையும் சிவகிரி போவீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் சிவானந்தம், மனோஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×