என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா கேட்டு மனு"

    • ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி அதன் தலைவர் கண்ணன் தலைமையில் தாசில்தார் சண்முகவேலிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    • மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி அதன் தலைவர் கண்ணன் தலைமையில் தாசில்தார் சண்முகவேலிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து கண்ணன் கூறுகையில், எங்கள் மனுக்காள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால் போராட்டங்கள் நடத்துவோம் என்றார். இதில் நிர்வாகிகள் குமார், குழந்தை வேல், மூர்த்தி, சுந்தரராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நாங்கள் பரம்பரையாக 100 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறோம்.
    • பிள்ளைகளுக்கு திருமணமானதால், ஒரே வீட்டில் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மாரம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மாரம்பட்டி, நாப்பிரா ம்பட்டி, மாரங்கொட்டாய், வசந்தபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு, தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயபாலிடம் நேற்று மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பரம்பரையாக 100 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். பிள்ளைகளுக்கு திருமணமானதால், ஒரே வீட்டில் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

    போதிய இட வசதி இல்லாமல் குழந்தைகளுடன் தவித்து வருகிறோம். கல்லாங்குத்து அரசு புறம்போக்கு நிலத்தில், வீட்டுமனை பட்டா ஒதுக்கி, அரசு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மனுக்களை பெற்ற துணை தாசில்தார் ஜெயபால் மனு மீது உரிய நடநவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    ×