search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படை வீரர்"

    நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர்

    புதச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல் துறையில், ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர் நேற்று முன்தினம், காரைக்கால் காத்தா பிள்ளை கோடி சிக்னலில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ரூ. 75 ஆயிரம் மதிப்புடைய தங்க செயின் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.

    இதனை கண்டெடுத்த ராஜேஷ் கண்ணா, உரிய விசாரணை மற்றும் காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில், உரியவரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் ராஜேஷ் கண்ணாவை பொன்னாடை போர்த்தி பாராட்டினார். விபரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ராஜேஷ் கண்ணாவை பாராட்டி வருகின்றனர். இந்த விவரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×