search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல்"

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் கடன்பெற்று தலைமறைவான ஊழல் வழக்கில் நிரவ் மோடியின் தங்கை புர்வி மோடியை கைது செய்ய இன்டர்போல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேவேளையில், இந்த மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடியின் தங்கை புர்வி தீபக் மோடியும் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார்.



    இந்நிலையில், இந்திய அரசின் நடவடிக்கையின் பேரில் பெல்ஜியம் நாட்டு குடியுரிமை பெற்றவரான புர்வி மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் கைது உத்தரவை சர்வதேச காவல்துறையான ‘இன்டர்போல்’ இன்று வெளியிட்டுள்ளது.

    சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் புர்வி தீபக் மோடி(44) எந்த நாட்டில் காணப்பட்டாலும் உடனடியாக கைது செய்யுமாறு சர்வதேச காவல்துறையினரை இந்த நோட்டீஸ் அறிவுறுத்தியுள்ளது. #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் விடுக்க இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice

    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டு தப்பிச்சென்று விட்டனர். 

    இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வழக்கமான அறிக்கை தாக்கல் செய்தது.

    அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ.14,356 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டு இருக்கிறது. 



    நிரவ் மோடி, சோக்சி உள்ளிட்டோரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலை ஏற்கனவே சிபிஐ நாடியது. வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பாஸ்போர்ட் மூலம் லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அண்ட்வெர்ப் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க, மீண்டும் இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படும் பட்சத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பதுங்கியுள்ள நாட்டிலேயே கைது செய்யப்பட்டு, அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NiravModi #ED #PNBScam

    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டு தப்பிச்சென்று விட்டனர். 

    இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வழக்கமான அறிக்கை தாக்கல் செய்தது.

    அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ.14,356 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டு இருக்கிறது. 

    இந்நிலையில், வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பாஸ்போர்ட் மூலம் லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அண்ட்வெர்ப் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NiravModi #ED #PNBScam
    ×