search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேசமணி"

    • பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மார்ஷல் நேசமணி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • இந்த பிறந்த நாள் விழாவில், அந்தியூர் நகர தலைவர் சரவணன், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைதலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையம் பகுதியிலுள்ள பெருந்தலை–வர் மக்கள் கட்சி அலுவ–லகத்தில் கன்னியா–குமரி மாவட்டத்தை தமிழ–கத்தோடு சேர்க்க போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட

    மார்ஷல் நேசமணியின் 127- வது பிறந்த நாள் நிகழ்ச்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடைப்பெற்றது

    அந்தியூர் ஒன்றிய தலைவர் சக்திவேலன் அனைவரையும் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் தங்கதுரை, தென் மாவட்ட நாடார் சங்க தலைவர் நெல்லை மகாதேவன் கலந்து கொண்டு மார்ஷல் நேசமணியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    அந்தியூர் நகர தலைவர் சரவணன், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைதலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்

    ×