search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் தேக்க தொட்டி"

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    வெம்பாக்கம் ஒன்றியம், தென் கழனி கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிணறு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, சிமெண்ட் சாலை ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் சேர்மன் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒ. ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுமுடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஜெ.சி.கே.சீனிவாசன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி விளையாட்டு போட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    • மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.
    • கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலா பேரி கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்திற்குள் குறும்பலாபேரி கிராம மக்களுக்கு குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அடியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் பில்லர்கள் அனைத்தும் கம்பிகள் வெளியில் தெரியும் வண்ணம் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

    கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர் தேக்க தொட்டியை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறும்பலாபேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×