search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறை புத்தரிசி பூஜை"

    • வருகிற 10-ந்தேதி நடக்கிறது
    • ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல் மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும்

    கன்னியாகுமரி :

    நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். பூஜையில் வைக்கப்படும் நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டித் தொங்க விடுவார்கள். இதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல்மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் உள்ள கோவில்களில் நடைபெறும். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற 10-ந்தேதி நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 5 மணி அளவில் திருவட்டார் பஸ் நிலையம் அருகில் உள்ள முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    தொடர்ந்து 5.45 முதல் 6.15-க்குள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்கிரகங்கள் முன்பு அவை படைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பூஜைகளுக்கு பின்னர் சந்தன பிரசாதத்துடன் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள்.
    • அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்

    கன்னியாகுமரி, ஆக.3-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும். நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை வருகிற 10-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை நடக்கிறது.

    அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கப்படும். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்பின்னர் நெற்கதிர்கள் மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்துகின்றனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது.

    பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள்.

    இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். மேலும் இந்த நெற்கதிர் மணிகளை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும்.

    • நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது.
    • நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்இந்த ஆண்டுக்கான தை மாத நிறைபுத்தரிசி பூஜை வருகிற 5-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடக்கிறது. இதையொட்டி அன்றுஅதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    பின்னர் அந்த நெற்கதிர் கட்டுகளை கோவில் மேல் சாந்தி தலையில் சுமந்தபடி மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் அந்த நெற்கதிர் கட்டுகளை பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளை கோவில் மேல் சாந்திகள் நடத்துகிறார்கள்.

    சிறப்பு பூஜை முடிந்தபிறகு நெற்கதிர்கள்அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நெற்கதிர்களை பக்தர்களுக்குகோவில் மேல்சாந்தி வழங்குகிறார்.

    நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங் கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடக்கிறது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவிலின் உள் பிரகாரத் தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவை நடக்கிறது. நிறைபுத்தரிசி பூஜையை யொட்டி பகவதி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல்மூக்குத்திமற்றும் திருவாபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன்அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைகுமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

    • தைப்பூசத்தை முன்னிட்டு காலை, மாலை வேளையில் வாகன பவனி நடக்கிறது.
    • நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.

    பின்னர் அங்கிருந்து அதிகாலை 5.30 மணிக்கு மேளதாளத்துடன் நெற்கதிர்களை ஊர்வலமாக கொண்டு வந்து தாணுமாலய சாமி சன்னதியில் வைப்பார்கள். அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு செய்த பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்கள் வாழ்வும் செழிப்படையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    இதேபோன்று கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அன்றைய தினம் தைப்பூசம் வருவதையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் காலை மற்றும் மாலை வேளையில் வாகனபவனியும் நடக்கிறது.

    • கடந்த மாதம் 6-ந் தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

    கன்னியாகுமாரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் ஒன்றாகும். கடந்த மாதம் 6-ந் தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நாளை (4-ந் தேதி) நிறைபுத்தரிசி பூஜை இந்த கோவிலில் நடைபெறுகிறது. நாளை காலை 5 மணி அளவில் திருவட்டார் பஸ் நிலைய அருகில் உள்ள முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

    அதன் பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பூஜை செய்யப்படுகிறது. அதன்பின் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்கிரகங்கள் முன்பு அவை படைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பூஜைகளுக்கு பின்னர் சந்தன பிரசாதத்துடன் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • நிறை புத்தரிசி பூஜை 4-ந் தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பவுர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்ளிட்ட பல்வேறு விழா களும் வழிபாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடைபெறும்.

    ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண் மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும். நெற் பயிர்கள் செழித் தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண் டும் என்பதற்காக இந்த நிறை புத்தரிசி பூஜை நடத் தப்படுகிறது.

    இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை வருகிற 4-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடக்கிறது. அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவி லுக்கு கொண்டுவந்து சேர்க்கப்படும். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    அதன்பின்னர் நெற்கதிர் கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்து கின்றனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப் படுகிறது.

    பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது.இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள். இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவ தும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். மேலும் இந்த நெற்கதிர் மணிகளை வயலில் தூவி னால் அந்த போகம் சாகு படி செழித்தோங்கும்.

    நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவைநடக்கிறது.

    நிறை புத்தரிசி பூஜை யையொட்டி பகவதி அம்ம னுக்கு தங்க கவசம் வைரக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக் கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ×