search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நத்தம் விசுவநாதன் பேச்சு"

    • கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய வாக்கு ச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை தருவதாக உறுதியளித்து விட்டு தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கூறி ஏமாற்றி வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு ரூ.7000 இருந்தால் மாத செலவை சமாளித்து விடலாம். ஆனால் தற்போது ரூ.1000 இருந்தாலும் பற்றாக்குறை யாக உள்ளது. 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியு ள்ளளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மோசடியான ஏமாற்று வேலை. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண ங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். இனால் தொழில் துறையினர் கடுமை யாக பாதிக்கப்பட்டு ள்ளனர். தாலிக்கு தங்கம், லேப்டாப் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் பல நல்ல திட்டங்களை தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.

    மக்களை திறமையாக ஏமாற்றி மோசடி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று நடத்தி வருகின்றனர். இது போன்ற அதிருப்தியை வாக்குகளாக சேகரிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

    போலீஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த ஒரு கட்சித் தலைவர் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசும் அளவுக்கு ஆணவத்துடன் நடந்து வருகிறார். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற சிலர் மீடியா வெளிச்சத்தில் அரசியல் நடத்துகின்றனர்.

    கூட்டணி என்ற பெயரில் நம் தோளில் அமர்ந்து காதை கடிக்கின்ற வேலையை செய்தனர். தற்போது அவர்களை நாம் தூக்கி எறிந்து விட்டோம். இனி அ.தி.மு.க.வின் வெற்றிக்கு எந்த தடையும் இல்லை. அனைத்து மதங்களையும் அரவணை க்கும் இயக்கமாக அ.தி.மு.க. செயல்படும். சனாதனம் என்ற போர்வையில் இந்து மதத்தை தி.மு.க.வினர் எதிர்க்கின்றனர். தமிழ்நாடு இது வரை கண்டிராத மோசமான நிர்வாகத்தை நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

    பழனி:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பழனி ஆர்.எப். ரோடு பகுதியில் நடைபெற்றது. பழனி நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட பொருளாளருமான வேணுகோபாலு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    மாவட்ட அவைத்தலைவர் குப்புச்சாமி, முன்னாள் எம்.பி. குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பழனி நகர அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசியதாவது,

    அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பா.ஜ.க. கூட்டணியில் இருந்த விலகியதை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து அனைவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. இறுதியில் பா.ஜ.க வேண்டவே வேண்டாம் என்ற கருத்தை கூறினர். அ.தி.மு.க. செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் வளர்ந்து வந்த பா.ஜ.க, அ.தி.மு.க.வையே அழிக்க நினைக்கிறது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. அவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருகிறார்.

    கட்சிக்கு வந்து குறைந்த காலமே ஆன அவருக்கு முதல்வராக வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. "என் மண்' என அண்ணாமலை உரிமை கொண்டாட முடியாது. இந்த மண் தமிழ்நாட்டு மண். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வை முன்னிலைப்படுத்தி நடைபயணம் மேற்கொள்ளாமல் தமிழகத்தில் தன் பெயரை அனைவரும் சொல்ல வேண்டும் என்பதற்காக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது.

    அ.தி.மு.க தனது சுயமரியாதையை இழந்து, பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நம் மக்களின், தொண்டர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு மத்தியில் பிரதமராக மோடியும், தமிழகத்தில் முதல்-அமைச்சராக அண்ணாமலை இருக்க வேண்டும் என்று பா.ஜ.க பேராசை படுகிறது. ஆனால் பா.ஜ.க எனும் வேண்டாத சுமையை தூக்கி எறிந்ததால் அ.தி.மு.க சுதந்திரமாக இருக்கிறது.

    தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மது கலாச்சாரத்தால் தி.மு.க மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 505 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றி விட்டு 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக தி.மு.க மக்களை ஏமாற்றி வருகிறது.

    பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வால் மத்திய அரசு மீதும், விலை வாசி உயர்வு காரணமாக தமிழகத்தில் தி.மு.க அரசு மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர் இவ்வாறு அவர் பேசினார்.

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் துணை பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது,

    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.கவின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தி.மு.கவினர் பழைய பூத் ஏஜென்ட்கள் அனைவரையும் மாற்றிவிட்டு புதிதாக நியமனம் செய்து உள்ளனர்.

    வாக்காளர் ஜாவிதா பட்டியலில் கட்சி நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த பொழுது எப்படி பம்பரமாக நாம் செயல்பட்டோமோ அதே போல் தற்போது செயல்பட வேண்டும்.

     இது நமது கட்சிக்காக செய்ய வேண்டிய அடிப்படை பணி. சரியாக செயல்படாத பூத் ஏஜெண்டுகளை மாற்ற வேண்டும். புதிதாக வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் திறம்பட செயல்பட வேண்டும்.

    அ.தி.மு.கவுக்கு வருங்காலம் பிரகாசமாக உள்ளது. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக மக்கள் மாபெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். எங்கே பார்த்தாலும் இந்த ஆட்சி அவப்பெயரை சம்பாதித்து உள்ளனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூட அடுத்த முறை நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக வருவார் என என்னிடம் கூறினார். அந்த அளவுக்கு தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய் உள்ளது.

    சில ஊடகங்கள் மட்டும் தி.மு.க அரசை பாராட்டி வருகிறது. தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

    ×