search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடன பயிற்சியாளர்"

    • சுபாஷ் சந்திரபோஸ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கதிர்வேல் சித்தோடு போலீசில் புகார் செய்தார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் புங்கம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த வர் கதிர்வேல். இவரது மகன் சுபாஷ் சந்திர போஸ் (வயது 28). நடன பயிற்சியாளரான இவர் தற்போது சித்தோடு பகுதியில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருகிறார்.

    கொளத்தூர் வால்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காவ்யா என்பவரை காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்தாண்டு காவியா வெளிநாடு சென்று வந்ததிலிருந்து கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவ்வ ப்போது சுபாஷ் சந்திர போஸ் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் காவியா மீண்டும் வெளிநாடு செல்வ தாக தெரி வித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் அவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கதிர்வேல் சித்தோடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×