search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியக்ெகாடி"

    • ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 77-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டப்பட்டது.
    • கலெக்டர்கள் தேசியக்கொடியேற்றி தியாகிகளை கவுரவித்தனர்.

    ராமநாதபுரம்

    இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாக–லமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடை–பெற்ற சுதந்திர தின விழா–வில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும், தேச ஒற்று–மையை வலியுறுத்தும் வித–மாக சமாதான புறாக்க–ளை–யும் பறக்க விட்டார்.

    பின்னர், திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவ–குப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை யைச் சேர்ந்த 29 பேருக்கும், வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 124 அலுவலர்களுக்கும் நற் சான்று பாராட்டுச் சான்றி–தழ்களை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக் கலைத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தாட்கோ, வேளாண்மை துறை சார் பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகை, தையல் எந்திரம், முதலமைச் சர் பொது நிவாரண நிதி, இலவச வீட்டு மனைப்பட்டா,

    சரக்கு வாகனம் வாங்க மானியக் கடன், தூய்மைப்ப–ணியாளர் நல வாரிய உறுப் பினர்களுக்கு வீடு வழங்கு–தல் என 57 பேர்களுக்கு ரூ.47 லட்சத்து 49 ஆயிரத்து 783 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக் டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 49 காவல் துறை அலுவலர்கள், பல் வேறு அரசு துறைகளைச் சார்ந்த 288 அலுவலர்கள் என மொத்தம் 337 அலுவ லர்களுக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

    விழாவையொட்டி 700 மாணவ, மாணவிகள் பங் கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) அபீதா ஹனீப், மாவட்ட வருவாய் அலுவலர், ராமநா தபுரம் வருவாய் கோட்டாட் சியர் உள்பட பல்வேறு அர சுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மைதானத்தில், இன்று நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையி னரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, சமாதானத்தை விளக்கும் வகையி, வெண்பு றாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

    விழாவில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, பேரூராட்சி துறை, ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், உள்பட பல்வேறு அரசுத்து றைகளின் சார்பில் மொத்தம் 22 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 200 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.

    70 காவலர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 285 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற் சான்றிதழ்கள் மற்றும் கேட யங்களை கலெக்டர் வழங்கி னார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம் பாட்டம், யோகா, கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    காவல் துறையில் சிறப் பாக பணிபுரிந்த 70 போலீ சாருக்கும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் பிறத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 285 அலுவலர் கள் மற்றும் பணியாளர்க ளுக்கு சான்றிதழ்களும், வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், சிவகங்கை எம்.எல்.ஏ. பிஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை), மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர் கள், காவல் துறை அலுவ லர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் சுதந்தி தின விழா கொண்டாடப் பட்டது. கலெக்டர் ஜெய–சீலன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் கருண் காரட் (அருப்புக் காோட்டை), தனஞ்ஜெயன் (சிவகாசி), ஜெகன்நாதன் (திருச்சுழி), வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ், திட்ட இயக்குநர் தண்ட பாணி, ஆர்.டி.ஓ.க்கள் சிவகுமார் (சாத்தூர்), விஸ்வநாதன் (சிவகாசி), கலெக்டர் நேர்முக உதவி யாளர் அனிதா உள்பட 391 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக் டர் வழங்கினார்.

    முன்னதாக ஜீப்பில் சென்று கலெக்டர் போலீ–சார் அணிவகுப்பு மரியா–தையை ஏற்றுக் கொண்டார். பள்ளி மாணவ, மாணவி–களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் வருவாய் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனி வாச பெருமாள், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றி வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதிராஜ சேகர் தேசியக் கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் தேசியக் கொடி ஏற்றினார். மாவட்ட பஞ்சா யத்து அலவலகத்தில் பஞ்சா யத்து தலைவி வசந்தி மான்ராஜ் தேசியக் கொடி ஏற்றினார். விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவு தூணில் தேசியக் கொடி ஏற்றப்பட் டது.

    கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் தலைவர் பாண்டுரங்கள் தேசியக் கொடி ஏற்றினார். விருதுநகர் எம்.பி. அலுவல கத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    ×