search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மனித உரிமைகள் ஆணையம்"

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AmritsarTrainAccident
    புதுடெல்லி:’

    பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற தசரா விழாவின்போது ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்குமாறு முதல்மந்திரி அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று அம்மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை இறந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கினார்.



    இந்நிலையில், இந்த விபத்து குறித்து மாநில அரசும், ரெயில்வே வாரியம் மற்றும் ரெயில்வே அமைச்சகம் ஆகியவை 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று  உத்தரவிட்டுள்ளது. #AmritsarTrainAccident
    டெல்லியில் பட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #DelhiHungerDeaths #NHRC
    புதுடெல்லி:

    டெல்லியில் மந்தவாலி என்ற பகுதியில் மங்கள் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். ரிக்‌ஷா தொழிலாளியான இவருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவருடைய மனைவியும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் இவர்களின் 8, 5, 2 வயது பெண் குழந்தைகள் பட்டினியால் தவித்தனர். 

    இதற்கிடையே மங்களின் ரிக்‌ஷா திருட்டு போய் விட்டது. வீட்டில் இருந்த உணவு பொருட்களும் தீர்ந்து போக அக்கம்பக்கத்தினரிடம் உணவு வாங்கி சிறுமிகள் சாப்பிட்டனர். பின்னர் அவர்களின் உதவியும் கிடைக்கவில்லை.

    இதனிடையே மங்கள் வேலைக்காக வீட்டை விட்டு சில நாட்களுக்கு முன்பு சென்றார். தந்தை, தாய் கவனிப்பு இல்லாததால் 3 சிறுமிகளும் பட்டினியால் தவித்துள்ளனர். இந்நிலையில், மயங்கிய நிலையில் 3 சிறுமிகளும் 24-ந் தேதி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். 



    சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தததில் சிறுமிகளின் வயிற்றில் உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லை. அவர்கள் சாப்பிட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். 

    சிறுமிகள் உணவின்றி இறந்த விவகாரம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #DelhiHungerDeaths #NHRC

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவனின் முடியை வெட்டி மானபங்க படுத்தியதற்காக ஒடிசா அரசு 1 லட்ச ரூபாய் அபராதம் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு மாணவன் முறையாக முடியை பராமரிகாததை கண்டித்து ஜெயஸ்மிதா சா என்ற ஆசிரியை மாணவனின் முடியை வெட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டுக்கு செல்லாமல் எங்கோ ஓடி விட்டார்.

    இதுதொடர்பாக மாணவனின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவனின் மன உளைச்சலுக்கு காரணமான அந்த ஆசிரியையை கைது செய்தனர். மேலும், மாணவரின் மன உளைச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் திரிபாதி என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார்.

    இதுதொடர்பாக விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், ஒரு லட்ச ரூபாயை மாணவருக்கு வழங்குமாறு தலைமை செயலாளருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுப்படி, அபராதத்தொகை  வழங்கப்படாத நிலையில், இன்னும் 4 வார காலத்துக்குள் ஒரு லட்ச ரூபாயை வழங்கி, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் போராட்டத்தில் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக இருந்தது. அப்போது வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், அதிகப்படியான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    மிக முக்கியமான வழக்குகளை மட்டும் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதமே விசாரணை தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    துப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தூத்துக்குடியில் விசாரணையை நாளை தொடங்குகின்றனர். #ThoothukudiShooting #NHRC
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் மோதலாக மாறியது.

    இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடி தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ராஜராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தொடர்பாக‌ தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ‘மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரர் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகி தனது வாதங்களை முன்வைத்தார்.



    அதனை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், மூத்த போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மூன்று துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை கொண்டு உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியது.

    விசாரணைக்கு பின்னர் 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்கள் இன்று (சனிக்கிழமை) டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றனர்.

    தொடர்ந்து அந்த குழுவினர் நாளை (3-ந்தேதி) தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை பார்வையிடுகின்றனர். பின்பு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் ஆய்வு செய்த விவரங்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2 வாரங்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கபட உள்ளது. #ThoothukudiShooting #NHRC

    ×