search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய அறிவியல் தின விழா"

    • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
    • உதவிப் பேராசிரியர் கார்த்திக் பிரபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு சொற்பொழிவு மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். 3-ம் ஆண்டு மாணவி ஷர்மிளா வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் குமரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் இயற்பியல் துறை தலைவர் ஆசாத் பகதூர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மின் தேக்கிகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி, கட்டுரைப் போட்டி, வாய்மொழி விளக்கக் காட்சி, பழைய பொருட்களிலிருந்து கலை மற்றும் வண்ணக் கோலங்கள் உருவாக்குதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாலமுருகன் பரிசுகளை வழங்கினார். இரண்டாமாண்டு மாணவி கார்த்திகா நன்றிகூறினார்.

    உதவிப் பேராசிரியர் கார்த்திக் பிரபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.

    இதை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது இன்று நாம் அறிவியல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். அறிவியல் மனிதர்களுக்கு தேவையான உபகரணங்களை அளித்துள்ளது. முக்கியமாக தொலை தொடர்பு துறையில் வியக்கத்தகு பங்கை அளித்துள்ளது என தெரிவித்தார்.

    இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். விழாவில் சிறந்த அறிவியல் படைப்புக்கு 8-ம் வகுப்பு மாணவி அனீஸ் என்பவருக்கு தங்க நாணயத்தை, பள்ளியின் நிறுவனர் மணி வழங்கினார். மேலும் 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த சிறந்த படைப்புகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கினார்.

    விழாவின் முடிவில் பள்ளியின் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் நசீர்பாஷா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    ×