search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னைமரம்"

    • கத்தரி சீனிவாசராவ் இறால் பண்ணை குட்டையின் கரையில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார்.
    • அதிசயமாக ஒரு சில இடங்களில் 2 கிளைகளுடன் தென்னை மரங்களை காணலாம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், உன்ராயுடு பேட்டையை சேர்ந்தவர் கத்தரி சீனிவாசராவ். இவர் அதே பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருகிறார்.

    இறால் பண்ணை குட்டையின் கரையில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு தென்னை மரம் மற்ற மரங்களைப் போல் வளர்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரத்தில் மற்றொரு கிளை உருவானது. நாளாக நாளாக மேலும் 4 கிளைகள் வந்தன. சாதாரணமாக தென்னை மரங்கள் ஒரே கிளையுடன் வளர்வது வழக்கம்.

    அதிசயமாக ஒரு சில இடங்களில் 2 கிளைகளுடன் தென்னை மரங்களை காணலாம். ஆனால் அதிசயமாக இந்த மரத்தில் 6 கிளைகள் ஏற்பட்டது.

    இதேபோல் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள குளக்கரையில் பனை மரம் ஒன்று 5 கிளைகளுடன் உள்ளது.

    ஒரே ஊரில் 6 கிளைகளுடன் தென்னை மரமும், 5 கிளைகளுடன் பனை மரமும் உள்ளது.

    இதனை அக்கம்பக்கம் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

    • தென்னையில் அதிக மகசூல் பெற எவ்வாறு உரம் இடுவது என்பது குறித்து எடுத்துக்கூறப்பட்டது.
    • முகாமில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மாநில தலைமையகம் தென்னை விவசாயி களின் நலன் கருதி தென்னை அதிகமாக சாகுபடி செய்யும் கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் ஆலோச னையின்படி செங்கோட்டை வட்டா ரத்தில் அதிகமாக தென்னை சாகுபடி செய்து வரும் அச்சன்புதூர் கிராமத்தில் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) முகுந்தாதேவி தலைமை தாங்கினார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தின் இணை பேராசிரியர் சிவப்பிர காஷ் தொழில்நுட்ப உரையாற்றி னார். வட்டார துணை வேளாண்மை அலு வலர் சேக்முகைதீன், தென்னை யில் அதிக மகசூல் பெற எவ்வாறு உரம் இடுவது, என்னென்ன உரங்களை இட வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினார்.

    தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்க ப்பட்டது. அச்சன்பு தூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயியான சம்சுதீன், கட்டாரிபாண்டியன், வாசு தேவன், மீராகனி உள்ளிட்ட தென்னை விவசா யிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அச்சன்புதூர் உதவி வேளாண்மை அலு வலர் சம்சுதீன் மற்றும் ஸ்டாலின்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×