என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை அருகே தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
- தென்னையில் அதிக மகசூல் பெற எவ்வாறு உரம் இடுவது என்பது குறித்து எடுத்துக்கூறப்பட்டது.
- முகாமில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மாநில தலைமையகம் தென்னை விவசாயி களின் நலன் கருதி தென்னை அதிகமாக சாகுபடி செய்யும் கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் ஆலோச னையின்படி செங்கோட்டை வட்டா ரத்தில் அதிகமாக தென்னை சாகுபடி செய்து வரும் அச்சன்புதூர் கிராமத்தில் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) முகுந்தாதேவி தலைமை தாங்கினார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தின் இணை பேராசிரியர் சிவப்பிர காஷ் தொழில்நுட்ப உரையாற்றி னார். வட்டார துணை வேளாண்மை அலு வலர் சேக்முகைதீன், தென்னை யில் அதிக மகசூல் பெற எவ்வாறு உரம் இடுவது, என்னென்ன உரங்களை இட வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினார்.
தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்க ப்பட்டது. அச்சன்பு தூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயியான சம்சுதீன், கட்டாரிபாண்டியன், வாசு தேவன், மீராகனி உள்ளிட்ட தென்னை விவசா யிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அச்சன்புதூர் உதவி வேளாண்மை அலு வலர் சம்சுதீன் மற்றும் ஸ்டாலின்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.






