search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்த முகாம்"

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.
    • பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் கூட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம் ஆய்வு செய்தார். கந்தர்வக்கோட்டை சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாச்சத்திரம், நார்த்தாமலை, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொண்டைமான்நல்லூர், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நமணசமுத்திரம், ஆலங்குடி சட்டமன்றத் தொகு திக்குபட்ட கைக்குறிச்சி, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வைரம் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் கலைஞர் கருணாநிதி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் முகாம்களை அவர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கமுதி அருகே கணினி திருத்த முகாம் நடந்தது.
    • இந்த முகாம் வருகிற 8-ம் தேதி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் சிறப்பு கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் சேதுராமன் அறிவுரையின் படி, கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில், கிழக்கு வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன் தலைமையில், கணினி திருத்த முகம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கணினி யில் விடுபட்ட புழை எண் கள், விஸ்தீரன பிழை உள் பட பல்வேறு திருத்தங்கள் செய்து கொடுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கமுதி, செங்கப்படை, தவசிகுறிச்சி சம்பகுளம், சடையனேந் தல்பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர் போன்ற கிராமப் பகுதியில் உள்ள பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் நாகநாதன், அபிராமம் வருவாய் ஆய்வாளர் கலாராணி, கோவிலாங் குளம் வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் அப்பகுதிகளில் சிறப்பு கணினி திருத்த முகாம் நடைபெற்றது.

    இந்த முகாம் வருகிற 8-ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு வருவாய் ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×