search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்"

    • திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
    • கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கூடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இமயம் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை அமைப்பாளர் நவபுல் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், உமாநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மாநில சுயாட்சி எனும் தலைப்பிலும், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றினர்.

    இதில் முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஒன்றிய நகர செயலாளர்கள் லியாகத் அலி, இளஞ்செழியன் பாபு, சிவானந்தராஜா, சேகர், சுஜேஷ், முன்னாள் நகர செயலாளர்கள் காசிலிங்கம், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, சதக்கத்துல்லா, பேரூர் கழக செயலாளர்கள் சின்னவர், சுப்பிரமணி, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி, வள்ளி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆலன், ரெனால்டு, மகேஸ்வரன் உட்பட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்துகொண்டனர். இளைஞர் அணியினர் 400-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் நெல்லியாளம் நகர துணை அமைப்பாளர் சூசைராஜ் நன்றி கூறினார்.

    • பயிற்சி பாசறை கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் திராவிட இயக்க வரலாறு குறித்து பேசினார்.
    • 800-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் , இளம் பெண்களும் கலந்து கொண்டனர்.

     பாப்பிரெட்டிப்பட்டி.

    தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை சார்பில் மாநிலம் முழுவதும் பயிற்சிக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தி.மு.க.இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் திராவிட இயக்க வரலாறு குறித்து பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ் கா.அமுதரசன் மாநில சுயாட்சி குறித்து பேசினார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தடங்கம் மா. சுப்ரமணிஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 800-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் , இளம் பெண்களும் கலந்து கொண்டனர்.

    ×