search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாஜ் மஹால்"

    உத்தர பிரதேசத்தில் உள்ள தாஜ் மஹாலில் கல்லறை பகுதிக்கு செல்ல கூடுதலாக ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். #TajMahal
    ஆக்ரா:

    உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது.  முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான  கல்லறை பகுதிக்கு செல்வதற்கு கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண வசூல் முறையால் முக்கிய பகுதியில் மக்கள் கூட்டம் சேருவது குறையும்.



    இந்த கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.250 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோன்று சார்க் நாடுகளில் இருந்து வருவோர் ரூ.540க்கு பதிலாக ரூ.740 கட்டணம் செலுத்திட வேண்டும்.

    ரூ.50க்கான டிக்கெட் வைத்திருப்போர் கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது. ஆனால் அவர்கள் தாஜ் மஹாலை சுற்றி வந்து பின்பகுதியை காண முடியும்.  பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் அவர்கள் காண முடியும்.

    கடந்த 1983ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலம் என தாஜ் மஹால் அறிவிக்கப்பட்டது.  இந்தியாவில் முஸ்லிம் கலைக்கான அணிகலன் மற்றும் உலக பாரம்பரிய தலத்தில் உலகளவில் ஈர்த்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது என சான்று வழங்கப்பட்டு உள்ளது. #TajMahal
    வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதித்துள்ளது. #protectingTajMahal #ASITajMahalmaintenance
    புதுடெல்லி:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம் மங்கி, பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாஜ் மஹாலை ஒட்டியுள்ள யமுனை ஆற்றுப் பகுதியில் உள்ள மரங்களை இனியாவது வெட்டாமல் தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, எம்.சி. மேத்தா சமர்ப்பித்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் தாஜ் மஹால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்சையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது என்று வேதனை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தாஜ் மஹாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு சமீபத்தில் தாக்கல் செய்தது.

     தாஜ் மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


    மிக முக்கியமாக, தாஜ் மஹாலை சுற்றி உள்ள மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூட இருப்பதாகவும், அதற்கு பதிலாக சுற்றுலா மையம் அமைக்க இருப்பதாகவும் உத்தரப்பிரதேசம் மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆக்ரா, பைரோஸாபாத், மதுரா, ஹத்ராஸ், உத்தரப்பிரதேசத்தின் எட்டா நற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் ஆகிய பகுதிகளில் கான்பூர் ஐ,ஐ.டி. மாணவர்களை கொண்ட குழுவினர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து சுமார் 10,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

    இன்னும் 4 மாதங்களுக்குள் அந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் மத்திய அரசின் சார்பில் கோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தாஜ் மஹாலை பராமரிப்பது தொடர்பாக ‘யூனெஸ்கோ’ அமைப்பு கடந்த 2013-ம் ஆண்டில் வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து அளித்ததாக தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    தாஜ் மஹால் மீது சர்வதேச அமைப்பான ‘யூனெஸ்கோ’ கொண்டுள்ள அக்கறையைவிட நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இதனையடுத்து, தாஜ் மஹால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பராமரிக்கும் பொறுப்புகளை தொல்லியல் துறை இயக்குனர்,  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர், ஆக்ரா வட்டார கமிஷனர் ஆகியோர் ஏற்பார்கள் என சுப்ரீம் கோர்ட்டிடம் தொல்லியல் துறை உறுதியளித்துள்ளது.  #protectingTajMahal #ASITajMahalmaintenance
    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசு கடைபிடித்துவரும் மெத்தனப்போக்குக்கு சுப்ரீம் கோர்ட் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. #TajMahal
    புதுடெல்லி:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாஜ் மஹாலை ஒட்டியுள்ள யமுனை ஆற்றுப் பகுதியில் உள்ள மரங்களை இனியாவது வெட்டாமல் தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, எம்.சி. மேத்தா சமர்ப்பித்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் தாஜ் மஹால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்சையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது என்று வேதனை தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் அவர்கள் கேள்வி எழுப்பியபோது, தாஜ் மஹாலை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பு இந்திய தொல்லியல் துறையிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.

    தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்க உங்களிடம் தேவையான நிபுணர்கள் இல்லையா? அல்லது, இருந்தும் இதுதொடர்பாக நீங்கள் அக்கறை எடுக்கவில்லையா? தாஜ் மஹால் எப்படியாவது போகட்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா?

    அப்படி, உங்களிடம் நிபுணர்கள் இல்லாமல் போனாலும் நமது நாட்டில் உள்ள நிபுணர்கள் அல்லது வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம் என்று தெரிவித்த நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணையை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


    மே 9-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தாஜ் மஹாலை சுற்றி தேங்கி நிற்கும் யமுனை ஆற்றின் அசுத்த நீரில் காணப்படும் பூச்சிகளால் தாஜ் மஹால் அரிக்கப்பட்டு, பொலிவிழந்து வருவதாக குறிப்பிட்டார்.

    இதை கேட்டு பொறுமையிழந்த நீதிபதிகள், ’இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் தங்கள் பணியை சரியாக செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இதை தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஆனால், நீங்கள் பழியில் இருந்து தப்பித்து, உங்களை தற்காத்து கொள்வதில் அக்கறை காட்டுவதை அறிந்து இந்த கோர்ட் ஆச்சரியப்படுகிறது.

    தாஜ் மஹாலின் பராமரிப்பு தொடர்ந்து இந்திய தொல்லியல் ஆய்வு துறையிடம் இருக்க வேண்டுமா? என்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டனர்.

    இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர், ‘சுப்ரீம்  கோர்ட் முன்னர் அறிவுறுத்தியபடி, தாஜ் மஹாலை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு நிபுணர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.


    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர்முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    தாஜ் மஹாலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாசுப்பாடு தொடர்பாக கான்பூர் ஐ.ஐ.டி.யை சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்து வருவதாகவும், இந்த குழுவின் அறிக்கை இன்னும் நான்கு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இவ்விகாரத்தில் பாராளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்காமல் தாஜ் மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசு கடைபிடித்துவரும் மெத்தனப்போக்குக்கு இன்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தாஜ் மஹாலை பாதுகாக்க மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இனி மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.

    தாஜ் மஹாலை பாதுகாப்பது தொடர்பாக வரைவு திட்டம் ஏதும் தயாரிக்க தவறிய உத்தரப்பிரதேசம் மாநில அரசின் செயல்பாடு குறித்தும் வேதனை தெரிவித்த நீதிபதிகள், வரும் 31-ம் தேதி முதல் இவ்வழக்கில் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். #SCslamsCentre #protectingTajMahal
    தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் விலையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். #tajmahal #solarcar
    லக்னோ:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், ஆக்ரா பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தாஜ்மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை கண்டுபிடித்துள்ளனர்.

    ஆக்ரா நகரின் நெரிசல் மிகுந்த சாலையில் மணிக்கு அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியாய் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டும், வாகனங்கள் வெளியிடும் புகையால் தாஜ் மஹால் மேலும் மாசுபடாமல் தடுக்கும் வகையிலும் இந்த கார் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மாணவர்கள், நமது நாட்டில் ஆண்டுதோறும் சூரிய ஒளி கிடைப்பதாலும், இந்த காருக்கான உதிரிபாகங்கள் சுலபமாக கிடைக்கும் என்பதாலும் இந்த திட்டம் நல்ல பலனைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “நெக்ஸ்ஜென்”  (Nexgen)  காரின் விலை 50 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  #tajmahal #solarcar
    ×