search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர்கள் இரங்கல்"

    முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், ராணுவ மந்திரியாக பதவி வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார். அரசியல்வாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முக தன்மைகளை கொண்ட இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை மந்திரியானார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக்கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அச்சமற்ற, வெளிப்படையான மற்றும் தொலைநோக்குடன், அவர் நம் நாட்டிற்கு மதிப்புமிக்க பங்களிப்பை ஆற்றி உள்ளார்.  அவர் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் பற்றி நாம் நினைவுகூரும்போது நீதிக்காகப் போராடிய ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும் அவரை நாம்  நினைவில் கொள்கிறோம். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களை அவரது மறைவு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என கூறியுள்ளார்.



    இதேபோல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
    முன்னாள் மந்திரி குருதாஸ் காமத் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat #RIPGurudasKamat
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான குருதாஸ் காமத் (வயது 63), டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இருந்தபோது இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது கார் டிரைவர் அவரை சாணக்யபுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.  அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் மும்பையில் இருந்து டெல்லிக்கு விரைந்தனர்.



    குருதாஸ் காமத் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் சோனியா காந்தி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ‘குருதாஸ் காமத் மறைவு காங்கிரஸ் குடும்பத்திற்கு விழுந்த பெரிய அடி ஆகும். மும்பையில் காங்கிரசை கட்டமைக்க உதவிய அவர், அனைவராலும் மதிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். இந்த துயரம் நிறைந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என ராகுல் டுவிட் செய்துள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பா.ஜ.க. எம்பி கிரித் சோமையா, சிவசே எம்எல்ஏ மனிஷா காயண்டே என பல்வேறு கட்சி தலைவர்களும் குருதாஸ் காமத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat #RIPGurudasKamat
    ×