என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்பின் பவுலிங் போட்டி"

    • போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.
    • இறுதி ஆட்டம் "பேக்கர் வடிவத்தில் (Baker Format)" நடைபெற்றது

    DAVe BABA VIDYALAYA தமிழ் நாடு ஓபன் ட்ரையோஸ் டென்பின் பவுலிங் தொடர் 2025 போட்டியில், டெல்லிஷார்க்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்த போட்டி லெட்ஸ் பவுல், தோரைய்ப்பாக்கம், சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் (TNTBA) இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்பின் (Tenpin Bowling Federation of India) ஆதரவுடன் ஏற்பாடுசெய்தது.

    இறுதி ஆட்டம் "பேக்கர் வடிவத்தில் (Baker Format)" நடைபெற்றது, இது இரண்டு ஆட்டங்களின் மொத்த பின்ஃபால் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. டெல்லி ஷார்க்ஸ் அணியின் வீரர்கள் — த்ருவ் சார்தா, பள்குனாரெட்டி மற்றும் சுனில் சர்மா — ஸ்ட்ரைக் சிண்டிகேட்சென்னை (சோபன் டி., கணேஷ் என்.டி., குருநாதன்) அணியை வெறும் 12 பின்களால் (375–363) வென்று பட்டம் வென்றனர்.

    முதல் ஆட்டத்தின் முடிவில், டெல்லி ஷார்க்ஸ் அணி 3 பின்களால் (170–173) பின்தங்கியிருந்தது. ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் அவர்கள் 205 பின்கள் விழ்த்திதிடீர் திரும்புபாடு கண்டனர். கடைசி ஃப்ரேமில் கணேஷ்என்.டி. ஸ்ட்ரைக் அடிக்க தவறியதால், டெல்லி ஷார்க்ஸ் அணி வெற்றியை உறுதி செய்தது!

    அரையிறுதி 1:
ஸ்ட்ரைக் சிண்டிகேட் சென்னை, டிரிபிள் த்ரெட் சென்னை(தீபக் கோத்தாரி, பார்த்திபன், ஆனந்த் ராகவ்) அணியை403–369 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    அரையிறுதி 2:
டெல்லி ஷார்க்ஸ் அணி, சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் (ஆனந்த் பாபு, சபீனா அதிகா, அபிஷேக் டி.) அணியை 364–357 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    டிரிபிள் த்ரெட் சென்னை அணி மொத்தமாக மூன்றாம்இடத்தை பெற்றது. இந்த நான்கு நாள் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.

    சென்னை தண்டர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 4 ஆட்டங்களைக்கொண்ட 3 பிளாக்குகளில் அதிக சராசரியை பெற்றதற்காக சிறப்பு பரிசை வென்றது.

    • தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி டென்பின் பவுலிங் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
    • போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    இரண்டாவது தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டி, ஐதராபாத்தில் உள்ள கேம் எக்ஸ்ட்ரீம் பவுலிங் சென்டரில் நடைபெற்றது. தெலுங்கானா டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் நடத்திய இத்தொடரில் தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி டென்பின் பவுலிங் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.

    ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் இரண்டு போட்டிகளில் மொத்த பின்ஃபால் அடிப்படையில், முதலிடம் பெற்ற தமிழக வீரர் மகிபால் சிங் தனது சக தமிழக 7வது நிலை வீரர் கணேஷ் என்.டி-யுடன் மோதினார். இந்த போட்டியில் மகிபால் சிங், 52 பின்கள் வித்தியாசத்தில் (405-353) கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் தற்போதைய தேசிய சாம்பியன் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமதி நள்ளபண்டு, கர்நாடகாவின் ஹிதாஷா சிசோடியா மற்றும் தமிழ்நாட்டின் சபீனாஅதீக்காவை 3 பின்களின் வித்தியாசத்தில் (298 - 295 - 280) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்த தொடரில், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 94 வீரர், வீராங்கனைகள் (82 ஆண்கள் மற்றும் 12 பெண்கள்) பங்கேற்றனர். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    • பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி.
    • முதல் நிலை வீரரான விவேக் சிங் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை முதல் தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) நடைபெற்றது.

    இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் 2வது நிலை வீரரான கர்நாடாகை சேர்ந்த கிஷான்.ஆர், டாப் வீரர் தெலுங்கானாவை சேர்ந்த விவேக் சிங்குடன் மோதினார்.

    இரண்டு கேம்களில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய கிஷான்.ஆர், (கேம் ஒன் 179) பின்களோடு, 159 பின்கள் எடுத்த விவேக்கை விட 20-பின்கள் முன்னிலை பெற்றார்.

    மேலும், 2வது கேமில், விவேக் 189 பின்களும், கிஷான் 174 பின்களும் ஸ்கோர் செய்த நிலையில், ஒட்டுமொத்தமாக 353-348 என்ற பின்களோடு, 5 பின்கள் வித்தியாசத்தில் விவேக்கை வீழ்த்தி கிஷான்.ஆர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    முன்னதாக ஆண்கள் பிரிவில் நடைபெற்ற ஸ்டெப்லேடர் முதலாவது சுற்றில், 5வது நிலை வீரரான கர்நாடகாவை சேர்ந்த பர்வேஸ் அகமது, (364), 3வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த லலித்குமார் (327) மற்றும் கர்நாடாகவை சேர்ந்த ஈஸ்வர்ராவ் (324) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    2வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த நவீன் சித்தம் ((395) 6 வது நிலை வீரரான கர்நாடாகாவின் விஜய் பஞ்சாபி (303) மற்றும் 8 வது நிலை வீரரான ஆந்திரப் பிரதேசின் அப்துல் முசீப் (365) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறினார்.

    3வது நிலை வீரரான கிஷன் ஆர் (394) 4வது நிலை வீரரான நவீன் சித்தம் (340) மற்றும் 5 வது நிலை வீரரான பர்வேஸ் அகமது (366) ஆகியோரை வீழ்த்தி, முதல் நிலை வீரரான விவேக் சிங் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், தமிழக வீராங்கனை சனா சலீம் ( கேம் ஒன் 172) 5 பின்கள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் கர்நாடக வீராங்கனை ஹிட்டாஷா சிசோடியா (167) மற்றும் மற்றொரு தமிழக வீராங்கனை சபீனா அதிகா (167) ஆகியோரை வீழ்த்தினார்.

    ஹிட்டாஷா தொடர்ச்சியாக நான்கு ஸ்ட்ரைக்குகளை பெற்றார். பின்னர் 199 ஸ்கோர் செய்தார். சபீனா மிகுந்து போராடியும் 185 மட்டுமே ஸ்கோர் செய்தார். சனா சலீம் 147 பின்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து 14 பின்கள் வித்தியாசத்தில் ஹிட்டாஷா (366-352-319) முதல் இடத்தை பிடித்தார்.

    • சென்னை எழும்பூரில் உள்ள டியு (DU) பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ’அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தீராக் காதல்’ போன்ற படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் பரிசுகளை வழங்கினார்.

    சென்னை எழும்பூரில் உள்ள டியு (DU) பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டியில் முன்னாள் மாநில சாம்பியன் யூசுப் ஷபீர், கணேஷ்.என்.டி-யை (384-355) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இரண்டு சுற்றுகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், கணேஷ், யூசுப்பை (177-170) விட 7 பின்கள் முன்னிலையுடன் முதல் சுற்றை முடித்தார். 2 வது சுற்றில் யூசுப் 178 புள்ளிகளுடன் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் 29 பின்களின் ஒட்டுமொத்த பின்ஃபால் வித்தியாசத்தில் கணேஷை யூசுப் ஷபீர் வீழ்த்தினார்.




    முந்தைய நாள், இரண்டு சுற்றுகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய முதல் அரையிறுதியில், முதல் நிலை வீரரான யூசுப் ஷபீர் நான்காம் நிலை வீரரான அக்ரமுல்லா பைக்-ஐ இரண்டு கேம் நாக் அவுட்டில் 78 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். யூசுப் ஷபீர் போட்டியின் 2வது மற்றும் 3வது சுற்றில் 18 சுற்றுகளின் தகுதி புள்ளிகளை சராசரியாக 187.06 (பின்ஃபால் 3367) இல் முடித்தார்.

    இரண்டாவது அரையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான ஆனந்த் பாபு, மூன்றாம் நிலை வீரரான கணேஷ் என்.டி-யை எதிர்த்து விளையாடினார். கணேஷ் 32 பின்கள் வித்தியாசத்தில் ஆனந்தை (389-357) தோற்கடித்து இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார். இப்போட்டியின் நிறைவு விழாவில் 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்', 'தீராக் காதல்' போன்ற படங்களை இயக்கியிருக்கும் ரோகின் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    • சென்னையில் முதல் மாநில அளவிலான டென்பின் பவுலிங் போட்டி நடைபெற்றது.
    • விஷ்ணு, தன்னை எதிர்த்து விளையாடிய ஆனந்த் பாபுவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள 'லெட்ஸ் பவுல்' டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் நடைபெற்று வந்தது.

    டாப் 3 அடிப்படையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷபீர் தன்கோட் - விஷ்ணு எம் மோதினர். இதில், முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றியுடன் இருவரும் சமநிலையில் இருந்தனர். மூன்றாவது போட்டியில் ஷபீர் தன்கோட், தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணுவை 5 பின்கள் என்ற குறுகிய வித்தியாசத்தில் (180-175) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றார்.

    6 விளையாட்டுகளின் பிளாக்கில் அதிகபட்ச சராசரி (201.1) பெற்ற மஹிபால் சிங் மற்றும் 225-க்கு மேல் என்ற அதிகபட்ச ஸ்கோர்கள் (2) பெற்ற ஷபீர் தன்கோட் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ×