என் மலர்
நீங்கள் தேடியது "ten pin bowling game"
- பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி.
- முதல் நிலை வீரரான விவேக் சிங் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை முதல் தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) நடைபெற்றது.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் 2வது நிலை வீரரான கர்நாடாகை சேர்ந்த கிஷான்.ஆர், டாப் வீரர் தெலுங்கானாவை சேர்ந்த விவேக் சிங்குடன் மோதினார்.
இரண்டு கேம்களில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய கிஷான்.ஆர், (கேம் ஒன் 179) பின்களோடு, 159 பின்கள் எடுத்த விவேக்கை விட 20-பின்கள் முன்னிலை பெற்றார்.
மேலும், 2வது கேமில், விவேக் 189 பின்களும், கிஷான் 174 பின்களும் ஸ்கோர் செய்த நிலையில், ஒட்டுமொத்தமாக 353-348 என்ற பின்களோடு, 5 பின்கள் வித்தியாசத்தில் விவேக்கை வீழ்த்தி கிஷான்.ஆர் சாம்பியன் பட்டம் வென்றார்.
முன்னதாக ஆண்கள் பிரிவில் நடைபெற்ற ஸ்டெப்லேடர் முதலாவது சுற்றில், 5வது நிலை வீரரான கர்நாடகாவை சேர்ந்த பர்வேஸ் அகமது, (364), 3வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த லலித்குமார் (327) மற்றும் கர்நாடாகவை சேர்ந்த ஈஸ்வர்ராவ் (324) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
2வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த நவீன் சித்தம் ((395) 6 வது நிலை வீரரான கர்நாடாகாவின் விஜய் பஞ்சாபி (303) மற்றும் 8 வது நிலை வீரரான ஆந்திரப் பிரதேசின் அப்துல் முசீப் (365) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறினார்.
3வது நிலை வீரரான கிஷன் ஆர் (394) 4வது நிலை வீரரான நவீன் சித்தம் (340) மற்றும் 5 வது நிலை வீரரான பர்வேஸ் அகமது (366) ஆகியோரை வீழ்த்தி, முதல் நிலை வீரரான விவேக் சிங் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், தமிழக வீராங்கனை சனா சலீம் ( கேம் ஒன் 172) 5 பின்கள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் கர்நாடக வீராங்கனை ஹிட்டாஷா சிசோடியா (167) மற்றும் மற்றொரு தமிழக வீராங்கனை சபீனா அதிகா (167) ஆகியோரை வீழ்த்தினார்.
ஹிட்டாஷா தொடர்ச்சியாக நான்கு ஸ்ட்ரைக்குகளை பெற்றார். பின்னர் 199 ஸ்கோர் செய்தார். சபீனா மிகுந்து போராடியும் 185 மட்டுமே ஸ்கோர் செய்தார். சனா சலீம் 147 பின்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து 14 பின்கள் வித்தியாசத்தில் ஹிட்டாஷா (366-352-319) முதல் இடத்தை பிடித்தார்.
- சென்னை எழும்பூரில் உள்ள டியு (DU) பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
- இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ’அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தீராக் காதல்’ போன்ற படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் பரிசுகளை வழங்கினார்.
சென்னை எழும்பூரில் உள்ள டியு (DU) பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டியில் முன்னாள் மாநில சாம்பியன் யூசுப் ஷபீர், கணேஷ்.என்.டி-யை (384-355) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இரண்டு சுற்றுகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், கணேஷ், யூசுப்பை (177-170) விட 7 பின்கள் முன்னிலையுடன் முதல் சுற்றை முடித்தார். 2 வது சுற்றில் யூசுப் 178 புள்ளிகளுடன் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் 29 பின்களின் ஒட்டுமொத்த பின்ஃபால் வித்தியாசத்தில் கணேஷை யூசுப் ஷபீர் வீழ்த்தினார்.

முந்தைய நாள், இரண்டு சுற்றுகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய முதல் அரையிறுதியில், முதல் நிலை வீரரான யூசுப் ஷபீர் நான்காம் நிலை வீரரான அக்ரமுல்லா பைக்-ஐ இரண்டு கேம் நாக் அவுட்டில் 78 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். யூசுப் ஷபீர் போட்டியின் 2வது மற்றும் 3வது சுற்றில் 18 சுற்றுகளின் தகுதி புள்ளிகளை சராசரியாக 187.06 (பின்ஃபால் 3367) இல் முடித்தார்.
இரண்டாவது அரையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான ஆனந்த் பாபு, மூன்றாம் நிலை வீரரான கணேஷ் என்.டி-யை எதிர்த்து விளையாடினார். கணேஷ் 32 பின்கள் வித்தியாசத்தில் ஆனந்தை (389-357) தோற்கடித்து இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார். இப்போட்டியின் நிறைவு விழாவில் 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்', 'தீராக் காதல்' போன்ற படங்களை இயக்கியிருக்கும் ரோகின் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.






