என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெயலலிதா பிறந்தநாள் விழா"
- எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
காங்கயம்:
குண்டடம் ருத்ராவதி பேரூராட்சி பகுதியில் குண்டடம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குண்டடம் பேரூர் செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், கவுன்சிலருமான ஏ.பி.கே. தமிழரசு தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ருத்ராவதி பேரூராட்சி கவுன்சிலர்களான சுமதி பழனிசாமி, குமார், ஜெயலலிதா பேரவை தியாகராஜன், பி.ஏ.பி.,முத்துசாமி, ெபாருளாளர் முத்துசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
- விழாவுக்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பெருமாநல்லூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருப்பூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பின்னர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள், எஸ்.எம்.பி, மாநகர இணைசெயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, சொசைட்டி தலைவர் பொன்னுலிங்கம், முன்னாள் தலைவர் தங்கராஜ், பாசறை செயலாளர் சந்திரசேகர், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ், முன்னாள், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், ஊராட்சி செயலாளர்கள் உத்தமேஸ்வரன், ராக்கியன்னன், செல்வராஜ், குமாரசாமி, தங்கராஜ், முருகேஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
- வக்கீல் வெங்கடா ஜலபதி,ஞானாம்பிகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடத்தில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 -வது பிறந்தநாளை முன்னிட்டு நகர அ.தி.மு.க. சார்பில், பல்லடம் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி,கூட்டுறவு சங்கத் தலைவர் பானு பழனிச்சாமி, நகர நிர்வாகிகள் தர்மராஜன், தமிழ்நாடு பழனிச்சாமி, மரக்கடைகிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன், நாராயணன்,ரமேஷ்,கந்தசாமி, மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில், தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் துரைக்கண்ணன்,வக்கீல் வெங்கடா ஜலபதி,ஞானாம்பிகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காங்கயம் நகர அ.தி.மு..க. முன்னாள் பொருளாளர் கந்தசாமி வரவேற்று பேசினார்.
- விழாவில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கயம் :
காங்கயம் நகர அ.தி.மு.க., சார்பில் காங்கயம் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கயம் அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், குண்டடம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கயம் நகர அ.தி.மு..க. முன்னாள் பொருளாளர் கந்தசாமி வரவேற்று பேசினார்.
விழாவில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்