search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலாடா ஊராட்சி"

    • பள்ளி ஆண்டு அறிக்கையையும் வாசிக்கப்பட்டது.
    • விழாவில் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது.

    இதில் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் ஆசிரியர் ரமேஷ் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் பியூலா வரவேற்றார். பள்ளி ஆண்டு அறிக்கையை ஆசிரியை ஏஞ்சலா பொன்மணி வாசித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சந்தோஷ், நீலகிரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சத்யராஜ் , சமூக ஆர்வலர் சம்பத் மற்றும் அரசு அலுவலர்கள், சோலாடா, ஆல்காட் நகர், பன்னி மரம், காம்பளை, கல்லட்டி, மாசிக்கல், ஆசான துரை, சுற்று வட்டார கிராம தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் குழந்தைகளுக்கு பரிசுகளை ஆசிரியை கல்பனா வழங்கினார். முடிவில் ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார்.

    ×