search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் செக்யூரிட்டி"

    ஏற்கனவே பயன்படுத்திய சாம்சங் லேப்டாப் மாடலை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்.



    2008 ஆம் ஆண்டின் சாம்சங் லேப்டாப்பை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். இவர் வாங்கியிருக்கும் லேப்டாப்பில் தீங்கு விளைவிக்கும் உலகின் மிக மோசமான மென்பொருள் நிறுவப்பட்டு இருக்கிறது.

    தி பெர்சிஸ்டன்ஸ் ஆஃப் சௌஸ் (The Persistence of Chaos) என அழைக்கப்படும் இந்த மென்பொருளை சீனாவை சேர்ந்த இணைய நிபுணர் குவோ ஒ டாங் என்பவர் உருவாக்கினார். இதற்கு நியூ யார்க்கை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டீப் இன்ஸ்டின்க்ட் நிதியுதவி வழங்கியிருக்கிறது.

    இந்த நிறுவனம் இணையம் மூலம் நிஜ உலகில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க குவோவுடன் இணைந்து பணியாற்றியது. இதற்கு அந்நிறுவனம் குவோவிற்கு மால்வேர் சார்ந்த உதவிகளையும் வழங்கியது.

    "கம்ப்யூட்டர்கள் உண்மையில் நம்மை பாதிக்காது என்ற மாயை நம்மிடம் இருக்கிறது. ஆனால் இது முற்றிலும் முரணான ஒன்றாகும். ஆயுதப்படுத்தப்பட்ட வைரஸ்கள் மின் இணைப்புகளை தாக்கி நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை," என குவோ தெரிவித்தார்.



    இந்த வைரஸ்களின் பெயர்கள் பெரும்பாலும் பாப் பாடல்களின் தலைப்புகளாகவே கருதப்படுகின்றன. இதுவரை சுமார் 9500 கோடி டாலர்கள் அளவு பொருளாதார இழப்பை இவை ஏற்படுத்தி இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ரேன்சம்வேர் தாக்குதல் 150 நாடுகளில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிக கம்ப்யூட்டர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    மால்வேர் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க தேவையான வழிமுறைகளை பின்பற்றியதாக குவோ மற்றும் டீப் இன்ஸ்டின்க்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் மற்ற நெட்வொர்க்களுடன் இணையாமல் இருக்க ஏர்-கேப் செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ்கள் மற்ற கம்ப்யூட்டர்களை பாதிக்காமல் இருக்கும். இதனை வாங்கியவருக்கு அனுப்பும் போது இதன் இணைய வசதிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும்.

    இந்த மால்வேரில் வைரஸ்கள், வொர்ம்கள், ஸ்பைவேர், ரேன்சம்வேர் மற்றும் பல்வேறு இதர தீங்கிழைக்கும் குறியீடுகள் (தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் வகையில் உருவாக்கப்படுவது) உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது.
    சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான பாஸ்வேர்டு கண்டறியப்பட்டுள்ளது. #CyberSecurity



    லண்டன் தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் (NCSC) நடத்திய சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான ஒற்றை பாஸ்வேர்டு “123456” தான் என கண்டறியப்பட்டுள்ளது.

    பொது வெளியில் இருந்து கசிந்த அக்கவுண்ட்களின் விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்திய NCSC பொது மக்கள் அதிகம் பயன்படுத்திய எழுத்துக்கள், வார்த்தைகள் உள்ளிட்டவற்றை பார்த்தனர். இதில் “123456" என்ற பாஸ்வேர்டை மட்டும் சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தியிருக்கின்றனர். 

    இதற்கு அடுத்த இடத்தில் “123456789” இருந்தது. இவைதவிர “qwerty”, “password” மற்றும் “1111111” உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகளின் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. 



    இவற்றுடன் பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் பெயர்களில் ஆஷ்லி, மைக்கேல், டேனியல், ஜெசிகா மற்றும் சார்லி உள்ளிட்டவையும், கால்பந்து அணிகளின் பெயர்களான லிவர்பூல், செல்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. பொதுவான பாலஸ்வேர்டுகளை சூட்டுபவர்களில் பலர் ப்ளின்க் 182 (Blink-182) என்ற பாஸ்வேர்டையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

    பாஸ்வேர்டுகளில் பிரபல பெயர்கள் அல்லது எழுத்துக்களை பயன்படுத்துவோர் மிக எளிதில் ஹேக்கர் வசம் சிக்கிவிட முடியும் என NCSC தொழில்நுட்ப இயக்குனர் இயான் லெவி தெரிவித்தார். முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாக்க நினைப்போர் எளிதில் கணிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
    பயனர் விவரங்களை பாதுகாப்பதில் ஃபேஸ்புக் மீது நம்பிக்கையற்ற சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CyberSecurity



    ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை கைப்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து வலை வீசியிருப்பதாக கூறப்படுகிறது. 

    ஃபேஸ்புக் சார்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் அறியப்படாத நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்ற இருக்கும் நிறுவனம் பயனர் அக்கவுன்ட்களை பாதுகாப்பது, ஹேக்கிங் முயற்சிகளை கண்டறிந்து தெரிவிப்பது என பல்வேறு சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய நிறுவனத்தை கைப்பற்றும் பணிகள் எந்தளவு நிறைவுற்று இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், 2018-ம் ஆண்டின் இறுதியில் நிறுவனத்தை கைப்பற்றலாம் என தெரிகிறது. புதிய தகவல்கள் குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.



    சமீப காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கும் நிலையில், புதிய நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் ஃபேஸ்புக் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் சார்பில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாதுகாப்பை அதிகப்படுத்த ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும். சமீபத்திய ஹேக்கிங், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சர்ச்சை உள்ளிட்டவை சேர்த்து ஃபேஸ்புக் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதால், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Facebook #CyberSecurity
    ×