search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேரன்மகாதேவி வாலிபர் தற்கொலை"

    சேரன்மகாதேவியில் குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிநது சென்றதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    நெல்லை:

    சேரன்மகாதேவி, பொழிக்கரையை சேர்ந்த ரத்தினசாமி மகன் ஆறுமுக பெருமாள் (வயது26). இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது மனைவி தகராறு செய்து விட்டு தாய் வீடான குருவன் கோட்டைக்கு சென்று விட்டார்.

    இதில் மனம் உடைந்த ஆறுமுகப்பெருமாள் வி‌ஷம் குடித்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×