search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செருப்பு கடை"

    • கடையில் இருந்த செருப்புகள் மற்றும் ஷோகேஸ் உள்ளிட்ட அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    அவினாசி :

    அவினாசி கோவை மெயின்ரோட்டில் போலீஸ் நிலையம் எதிரில் நகை கடை, பேக்கரி, ஆயில் ஸ்டோர், ஓட்டல், மளிகை கடைகள், பேன்சி ஸ்டோர் என உள்ளது. அந்த வரிசையில் தனியார் செருப்புக்கடை உள்ளது.

    நேற்று மாலை 6 மணியளவில் அன்சாருதீன் என்பவரது செருப்புக்கடையில் இருந்த யு.பி.எஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து. இதில் ஷோ கேசில் இருந்த செருப்புகள் பற்றி எரிந்தது. அப்போது கடையில் இருந்த ஆக்கிப் (20) என்ற ஊழியர் நெருப்புகளுக்கு இடையில் சிக்கி கொண்டு வெளியேற முடியாமல் தவித்துள்ளார். அப்போது கடையின் முன்நின்றிருந்த சிலர் உதவியுடன் வெளியேற்றப்பட்டார். உடனடியாக கடையில் இருந்தவர்கள் வெளியேறியதால் அவர்கள் தப்பினர். இதுகுறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் வருவதற்குள் கடையில் இருந்த செருப்புகள் மற்றும் ஷோகேஸ் உள்ளிட்ட அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் பக்கத்து கடைகளிலும், செருப்பு கடையின் மேல்தளத்திலும் தீப்பிடித்து எரிந்தது. தீ பரவ ஆரம்பித்தது.உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து கடைவீதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ கட்டுக்குள் வந்தாலும் கடைக்குள் இருந்த பொருட்கள் மீண்டும், மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. எனவே திருப்பூர் குமார் நகரிலிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இதில் பக்கத்தில் இருந்த மற்றொரு செருப்புக் கடையிலும் தீ பரவி கடை பெயர்ப்பலகை உள்ளிட்ட சில பொருட்கள் எரிந்தது. தீவிபத்தால் கடைவீதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது.

    தகவல் அறிந்து வந்த அவினாசி தாசில்தார், போலீஸ் துணை சூப்பிரண்டு பவுல்ராஜ் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தீ விபத்தின் காரணமாக அவினாசி மெயின்ரோட்டில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவினாசி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    ×