search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா மையம்"

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து செல்வது வழக்கம்.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிற்கு தகவல் கொடுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து செல்வர். மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து செல்வது வழக்கம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் பராமறிக்கப்படும் இந்த சுற்றுலா மையத்தில் அரசின் தங்கும் விடுதியும், தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளது. இந்த விடுதிகள் அனைத்து விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நிரம்பி வழியும்.

    சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையில் கைத்துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைக் கண்டு பதறிப்போன ஊழியர்கள், அந்த அறையை விடடு தலைதெரிக்க ஓடிவந்தனர். இதனால் மற்ற அறைகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், பதட்டமடைந்து சுற்றுலா கழக விடுதியை விட்டு வெளியில் வந்தனர். பின்னர் தகவலறிந்து தங்களின் அறைக்கு திரும்பி சென்றனர் இது குறித்து துப்புரவு பணியாளர்கள் சுற்றுலா கழக மேலாளர் பைசலிடம் தகவல் கூறினர். துப்புரவு ஊழியர்களுடன் தங்கும் அறைக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த கைத்துப்பாக்கி ஏர்கண் என்பதை உறுதி செய்தார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிற்கு தகவல் கொடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து கிள்ளை போலீசார் பிச்சாவரத்தில் உள்ள சுற்றுலா கழக தங்கும் விடுதிக்கு விரைந்து சென்ற னர். அங்கிருந்த அறையில் கிடந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றினர். மேலும், கடந்த 2 தினங்களாக இங்கு தங்கியிருந்தவர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டனர். அவர்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பிச்சாவரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகாரிகளுடன், கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு
    • குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புத்தேரி குளத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் அரவிந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குளத்தை தூர்வாரி அதை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகனுடன் ஆலோசனை நடத்தினார்.

    புத்தேரி குளத்தை தூர்வாரி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் வாக்கிங் செல்ல வசதியாக நடை பாதை அமைப்பது தொடர்பாகவும், அங்கு சைக்கிளிங் செல்ல வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோ சிக்கப்பட்டது.

    இதுபோல குளத்தில் போர்ட் ரெஸ்டாரண்ட் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.இதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ரூ‌.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முதல் கட்டமாக இதற்கு ரூ.1 கோடியே 6 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆய்வின்போது பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார்.

    ×