search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுடு தண்ணீர்"

    • குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார்.
    • சிகிச்சைக்காக சென்ற குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்,

    கடலூர்:

    கடலூர் அடுத்த ஈச்சங்காடு சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவருக்கு 2 வயதில் கவினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.சம்பவத்தன்று குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை கவினேஷ் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகு பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    ×