search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவமொக்கா விமான நிலையம்"

    • ரூ.384 கோடி செலவில் சிவமொக்கா விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • அந்த விமான நிலையம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.384 கோடி செலவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று காலை நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

    இது கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும். எடியூரப்பாவின் 80-வது பிறந்தநாளில் சிவமொக்கா விமான நிலையம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த விமான நிலையம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சிவமொக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • சோகானே பகுதியில் ரூ.442 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த விமான நிலையத்தை நாளை மறுதினம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    பெங்களுரு:

    சிவமொக்கா நகரை ஒட்டிய சோகானே பகுதியில் ரூ.442 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா வரும் 27-ம் தேதி (நாளை) நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சோகனே பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சோகானே விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று கலெக்டர் செல்வமணி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சிவமொக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
    • வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை.

    பெங்களூரு :

    சிவமொக்காவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சிவமொக்கா மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (நேற்று) மட்டும் ரூ.1,000 கோடிக்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயரை சூட்ட மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு ஒரு வரைவு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    ஷராவதி அணையில் நீரில் மூழ்கிய நிலங்களின் விவசாயிகளுக்கு மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதுகுறித்து ஒரு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். சிவமொக்கா-சிகாரிபுரா-ராணிபென்னூர் ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    இதற்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை. குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவமொக்காவின் வளர்ச்சிக்கு இருபெரும் தலைவர்களான எடியூரப்பாவும், ஈசுவரப்பாவும் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    ×