என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலுவை பூக்கள்"

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் அரியவகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன.
    • டிசம்பர், ஜனவரி மாதங்களில் பேர்டப் பேரடைஸ் எனப்படும் பறவைகள் சரணாலயம், செர்ரிமரம் ஆகியவை பூத்துக் குலுங்குவது வழக்கம்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் நடந்து வருகிறது. வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே நகர் பகுதியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் ஸ்டார், கிறிஸ்துமஸ் குடில்கள், பல்வேறு வண்ண அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட ஏராளமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால். தற்போதே பல்வேறு தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்துள்ளனர். அரையாண்டு விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் அரியவகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன. குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பேர்டப் பேரடைஸ் எனப்படும் பறவைகள் சரணாலயம், செர்ரிமரம் ஆகியவை பூத்துக் குலுங்குவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிலுவை வடிவிலான பூக்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன.

    சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் கொத்துக் கொத்துதாகபூத்துக் குலுங்கும் இப்பூக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    • குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன.
    • சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. பிரையண்ட் பூங்காவில் பூச்செடி நாற்றுகளை நடவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதத்தில் சிலுவை பூக்கள் பூக்கும். அதன்படி தற்போது சிலுவை பூக்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.

    எபிடன்ரோபியம், சீசஸ்கிராஸ் என்று தாவரவியல் பெயர் கொண்ட இந்த சிலுவை மலர்கள் குளிர்பிரதேசங்களில் மட்டும் பூக்கக்கூடியதாகும். சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பூத்துக்குலுங்கும். இந்த சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். செட்டியார் பூங்கா மற்றும் தனியார் தோட்டங்களிலும் நடவு செய்யப்பட்ட சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகிறது.

    இந்த வார இறுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதனைதொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகள் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் செய்யப்பட்டு வருகின்றன. 

    ×