search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை தண்டணை"

    • மணிமேகலை (29) என்பவர் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த போது 5 பவுன் தாலிக்கொடியை கடந்த 2016-ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார்.
    • மணிகண்டன்(59) என்பவர் திருடியது தெரியவந்தது. எருமப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

    கொல்லிமலை:

    சேந்தமங்கலம் அடுத்த செவிந்திப்பட்டியை சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரி ராஜேஷ்கண்ணின் மனைவி மணிமேகலை (29) என்பவர் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த போது 5 பவுன் தாலிக்கொடியை கடந்த 2016-ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார்.

    சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் வெள்ளம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த மணிகண்டன்(59) என்பவர் திருடியது தெரியவந்தது. எருமப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். அந்த வழக்கு நேற்று சேந்தமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணையில் மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பளித்தார்.

    மணிகண்டன் உட்பட அவரது உறவினர்கள் 5 பேர் பல்வேறு வேலைகள் செய்து கொண்டு வீடுகளை நோட்டம் மிட்டு இரவு நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

    ×