search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி விருதுகள்"

    • பறவைகளின் பெயர் மற்றும் ஒலியினை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கூறியுள்ளார்.
    • பல விருதுகளை பெற்ற சிறுமி கே.ஏ.ஆருண்யாவை பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சிசுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.அருண் - எஸ்.ஐஸ்வர்யா ஆகியோரின் மகள் கே.ஏ.ஆருண்யா (வயது 3½).இன்னும் பள்ளிப்படிப்பை தொடங்கவில்லை. இந்த கல்வி ஆண்டில் தான் மங்கலம்-பூமலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு எல்.கே.ஜி. செல்ல உள்ளார். இந்த நிலையில் சிறுமி கே.ஏ.ஆருண்யா இதுவரை 7 விருதுகள் பெற்றுள்ளார்.

    அதன்படி வாரத்தின் 7 நாட்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறியுள்ளார். மேலும் மாதங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும்,நமது 4 தேசிய சின்னங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் , எண்கள் 1 முதல் 10 வரை தமிழ், ஆங்கிலம், இந்தியிலும், 14 விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர் மற்றும் ஒலியினை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கூறியுள்ளார்.

    இதற்காக சிறுமி கே.ஏ.ஆருண்யா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் . இந்தநிலையில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பல விருதுகளை பெற்ற சிறுமி கே.ஏ.ஆருண்யாவை பாராட்டி சால்வை அணிவித்தும்,பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரேவதிமுருகன்,ரபிதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ×