search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்"

    • முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தற்பொழுது 13 மனுக்கள் வரப்பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராஜசேகரன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 14 மனுக்களில் 12 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

    2 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. தற்பொழுது 13 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து முன்னாள் படைவீரர் 2 பேருக்கு கண்கண்ணாடி வாங்குவதற்கான மானியம் தலா ரூ.4 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இதில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி ஆணையர் மதியழகன், கண்காணிப்பு அலுவலர் சங்கர சுப்பிரமணியன், முன்னாள் படை வீரர் நல வாரிய செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுவினி யோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்களின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும், தாலுகாவிற்கு ஒரு இடம் என மொத்தம் 8 இடங்களில் நடைபெற உள்ளது.
    • வருகிற 10-ந் தேதி (சனிக்கி ழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.

    கிருஷ்ணகிரி,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்கு டன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வருகிற 10-ந் தேதி (சனிக்கி ழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுவினி யோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்களின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும், தாலுகாவிற்கு ஒரு இடம் என மொத்தம் 8 இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் வரட்டம்பட்டி, ஊத்தங்கரை குன்னத்தூர், போச்சம்பள்ளி கொட மாண்டப்பட்டி, பர்கூர் குருவி நாய னப்பள்ளி, சூளகிரி குடிசாதன ப்பள்ளி, ஓசூர் எஸ்.முதுகான ப்பள்ளி, தேன்கனி க்கோட்டை போடிச்சி ப்பள்ளி, அஞ்செட்டி சேசுராஜபுரம் ஆகிய கிராம ங்களில் நடைபெறு கிறது.

    எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    ×