search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு"

    • 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்க ழிவுகள் சேகரம் செய்ய ப்படுகிறது.

    இதில் 9 டன் மக்கும் கழிவுகளை எந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    3 டன் அதிக ஈரப்பதம் உள்ள உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தை கொண்டு எந்திரங்கள் இயக்கப்படுகிறது.

    மக்காத மறுசுழற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகின்றனர். மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பேப்ப ர்கள் போன்றவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவ ரையிலும் கோபிசெட்டி பாளையம் நகராட்சியில் இருந்து 3,260 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெ ண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிளாஸ்டிக் பைகள், கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • மாநகராட்சி குடோனுக்கு கொண்டு வரப்பட்டு சிறு, சிறு துண்டுகளாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை, அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் உள்ள 2 தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அனுமே பள்ளியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், ஓசூர் சுற்றுச்சூழல் துறை மாவட்ட பொறியாளர் வெங்கடேசன், மற்றும் மாநகராட்சி நகர் நல அலுவலர் அஜிதா ஆகியோர் தலைமையில் உதவி சுற்றுச்சூழல் துறை பொறியாளர் சுமித்ராபாய், உதவி பொறியாளர்கள் ரங்கசாமி, தீதையாளன் மற்றும் சுகாதார ஆய்வாளர் மணி மேற்பார்வையாளர்கள் சீனிவாசன், கவுரிசங்கர் ஆகியோர் அடங்கிய அதிரடி ரெய்டு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வு மற்றும் ரெய்டின் போது, சுமார் 15 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள், கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மின்இணைப்பை துண்டிக்கவும் , மேல் நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் லாரிகள் மூலம், ஓசூர் ஆனந்த நகரில் உள்ள மாநகராட்சி குடோனுக்கு கொண்டு வரப்பட்டு சிறு, சிறு துண்டுகளாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் இவை அரிய லூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ×