search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்னி டெஸ்ட் போட்டி"

    சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. #AUSvIND #SydneyTest
    சிட்னி:

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய புஜாரா 193 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 150 ரன்கள் எடுத்தார். மயாங்க் அகர்வால் 77 ரன்களும், ஜடேஜா 81 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் (2ம் நாள்) விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நிதானமாக ஆடிய ஹாரிஸ் 79 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கவாஜா 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி பிரிந்தபின்னர் ஆஸ்திரேலிய அணி தடுமாறத் தொடங்கியது. மார்ஷ் (8), லபூஸ்சாக்னே (38), ஹெட் (20) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.



    அதன்பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெய்னி (5 ரன்கள்) குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் கம்மின்ஸ்  இருவரும் விக்கெட்டைக் காப்பாற்ற நிதானமாக ஆடினர். ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் இன்றைய ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்களுடனும், கம்மின்ஸ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 386 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் நாளை கடும் நெருக்கடி கொடுப்பார்கள். விரைவில் 4 விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தும்பட்சத்தில், போட்டி இந்திய அணிக்கு சாதகமாக திரும்பும். #AUSvIND #SydneyTest
    சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. #AUSvIND #SydneyTest
    சிட்னி:

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய புஜாரா 193 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் எடுத்தார். மயாங்க் அகர்வால் 77 ரன்களும், ஜடேஜா 81 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் (2ம் நாள்) விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக ஆடிய ஹாரிஸ் 79 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கவாஜா 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி பிரிந்தபின்னர் ஆஸ்திரேலிய அணி தடுமாறத் தொடங்கியது. மார்ஷ் (8), லபூஸ்சாக்னே (38), ஹெட் (20) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெய்னி (5 ரன்கள்) குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் கம்மின்ஸ் ஜோடி விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாக போராடியது. #AUSvIND #SydneyTest
    சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் புஜாரா, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. #AUSvIND #SydneyTest
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    புஜாரா, மயாங்க் அகர்வால் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. மயாங்க் அகர்வால் 77 ரன்கள் சேர்த்தார். புஜாரா 130 ரன்களுடனும், விகாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய புஜாரா சிறிது நேரத்தில் 150 ரன்களைக் கடந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. சிட்னி அரங்கை அதிரவைத்த புஜாரா 181 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார்.

    உற்சாகத்துடன் பந்துகளை பறக்க விட்ட புஜாரா, இன்று தனது நான்காவது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் 193 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை மிரட்டிய ரிஷப் பந்த் சதம் அடித்தார். மறுமுனையில் ஜடேஜா அரை சதம் கடந்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் 500 ரன்களைத் தாண்டியது. 7வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 200க்கும் அதிகமான ரன்கள் சேர்த்தனர்.

    இந்நிலையில் ஜடேஜா 81 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 159 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக ஹாரிஸ், கவாஜா களமிறங்கினர். #AUSvIND #SydneyTest
    ×