search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.எஸ்.ஐ. பள்ளி"

    • விமலா செல்லத்துரை நினைவு அறிவியல் ஆய்வகம், 6 வகுப்பறை புதிய கட்டிடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ஆலை திறக்கப்பட்டது.
    • மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு-மதுரை சாலையில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் நினைவு சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விமலா செல்லத்துரை நினைவு அறிவியல் ஆய்வகம், 6 வகுப்பறை புதிய கட்டிடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ஆலை திறக்கப்பட்டது. விழாவிற்கு மதுரை முகவை திருமண்டில பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக ஜே.சி. குழுமத்தைச்சார்ந்த ஜெயசுரேஷ், ஜெய திலகர், ஜெயமனோகர், ஜெயபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஈடன் கார்டன் உரிமையாளர் கென்னடி கலந்து கொண்டார். பள்ளியின் தாளாளர் எட்வின் செல்லையா வரவேற்புரை ஆற்றினார்.பள்ளியின் தலைமைஆசிரியை ஷீபா நன்றி கூறினார். குருத்துவசெயலர் ரவீந்திரவிக்டர்சிங் நிறைவு ஜெபம் செய்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • சி.எஸ்.ஐ. பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
    • வைரம் அரிமா சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. போட்டியில் மானாமதுரை வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்க வசதியாக மானாமதுரை வைரம் அரிமா சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    பள்ளியில் நடந்த இதற்கான நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர்-ஓய்வுபெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசினார். தலைமை ஆசிரியர் செல்வின் ஆசிர்வாதம் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் பிச்சை, அரிமா சங்க நிர்வாகிகள் பூமிநாதன், முத்துக்குமார், அனுப்துபே ,பொறியாளர் காவேரி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    ×