search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயிபாபா"

    • மதியம் 12.15 மணிக்கு ஆர்த்தி மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
    • பாபாவின் திவ்ய அதிர்வுகளும், இந்திரலோக பிரகாசமும் நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம். இந்த ஆலயத்தில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாய்பாபாவின ஒளிரூப தரிசனவிழா நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆனந்த சாய் பஜன்ஸ் வழங்கும் பாபாவின் கானமழை நடைபெறுகிறது.

    காலை 11.20 மணி முதல் கூட்டு பிராத்தனை, மவுன ஆராதனை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு ஸ்ரீஷீரடி சாயிபாபாவின் திவ்ய பாதங்களில் 3 நிமிடங்கள் ஏற்படும் பாபாவின் திவ்ய அதிர்வுகளும், இந்திரலோக பிரகாசமும் நடைபெறுகிறது. மதியம் 12.15 மணிக்கு ஆர்த்தி மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீஷீரடி சாயி சேரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், ஸ்ரீஷீரடி சாயி சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

    ×