என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வானந்த்"
- தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்த்.
- ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது நடிகர் சர்வானந்தின் கார் விபத்துக்குள்ளானது.
தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து வருகிற ஜூன் 3-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
சர்வானந்த் -ரக்ஷிதா ரெட்டி
இந்த நிலையில் நேற்று (மே 28) காலை ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது நடிகர் சர்வானந்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில தினங்களில் திருமணம் ஆகவுள்ள நிலையில் சர்வானந்த் விபத்திற்குள்ளானது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்வானந்த் -ரக்ஷிதா ரெட்டி
இந்நிலையில் இந்த விபத்து குறித்து சர்வானந்த் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று காலை என்னுடைய கார் விபத்துக்குள்ளான செய்திகள் வெளியாகின. இது ஒரு சிறிய விபத்துதான். உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் நான் வீட்டில் நலமுடன் இருக்கிறேன். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. என் மீது வைத்துள்ள உங்கள் அக்கறைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சர்வானந்த்.
- இவருக்கு ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது. இதனை சர்வானந்த் குடும்ப நண்பர் ஒருவர் மறுத்து இருந்தார். சர்வானந்த் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பி இருக்கிறார் என்றும், திருமண வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். ஆனாலும் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக தொடர்ந்து தகவல் பரவி வந்தது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருக்கிறார். ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிச்சயதார்த்தம் நின்றுபோனதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
- தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் சர்வானந்த்.
- சர்வானந்த், சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டியை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் சர்வானந்த். ஜே, கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான கணம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சர்வானந்த் திருமணம் குறித்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
சர்வானந்த், வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பெண்ணை சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள முடிவாகி இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. திருமண நிச்சயதார்த்தத்தை நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வருகிற 26-ந் தேதி ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கசிந்தது.
இந்நிலையில் சர்வானந்த் சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டியை கரம் பிடிக்க உள்ளார். சர்வானந்த்-ரக்ஷிதாவின் நிச்சயாதார்த்தம் எளிய முறையில் இன்று நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை நடிகர் சர்வானந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்