search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனிப்பிரதோசம்"

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் சனிப்பிரதோச விழா வழிபாடு நடந்தது.
    • விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது 13-ம் நூற் றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ அன்ன பூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவில்.

    சனிப்பிரதோசத்தை முன்னிட்டு இந்த கோவிலில் நந்திக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம், அரிசி மாவு, விபூதி, பஞ்சா–மிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.

    மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் தெட்சிணாமுர்த்தி, லிங் கோத்பவர்,விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் உற்சவமூர்த்தி சுவாமி வீதி உலா நடை–பெற்றது. விரதமிருந்த பெண்கள் பலர் ஆலயத்தை சுற்றி வலம் வந்தனர்.

    பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம், நெய் வேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல் பிரசாத–மாக வழங்கப்பட்டது இதே போல் தொண்டி சிதம்ப–ரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சர்வ–தீர்த்தேஸ்வரர், ஒரியூர் சேயு–மானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் ஆகிய சிவா–லயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடை–பெற்றது.

    ×