search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டவிரோத மது"

    • ஒரு பெண் உள்பட 9 பேர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன், ஈரோடு தெற்கு, கருங்கல்பாளையம், கடத்தூர், சத்தியமங்கலம்,

    கவுந்தப்பாடி, சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் ஒரு பெண் உள்பட 9 பேர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 67 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி, காஞ்சிக்கோயில், சிவகிரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, சட்ட விரோதமாக மதுவிற்பனை–யில் ஈடுபட்டிருந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடமிருந்து 27 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சத்திரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 780 மதிப்பிலான 6 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல சத்தியமங்கலம் போலீசார் பண்ணாரி ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டி ருந்தனர். அப்போது உதையா மரத்து மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடை பெற்றது தெரியவந்தது.

    உடனடியாக அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அம்பலவாந்தல் பகுதியை சேர்ந்த அன்பரசு (21) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 8 மதுபாட்டில்கள் மற்றும் பணம் ரூ.1,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ×