search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கத்தின்"

    • 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். 2521 உறுப்பினர்கள் உள்ளனர்.
    • தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் 15 நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். 2521 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் சங்க தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்சிஎம். முருகேசன் தலைமையில் ஒரு அணியினரும், கேபிஆர் என்கிற பி.மூர்த்தி தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிட்டனர். தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் 15 நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    தலைவர் பதவிக்கு எஸ் சி எம். முருகேசன் மற்றும் கே பி ஆர் .மூர்த்தி, செயலாளர் பதவிக்கு முருகேசன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கே எஸ் .சுப்பிரமணியம் மற்றும் செல்வராஜ் ஆகியோரும் உப தலைவர் பதவிக்கு ராயல் பிரபு மற்றும் சங்கர் ஆகியோரும் உப செயலாளர் பதவிக்கு லட்சுமி சரவணன் மற்றும் செல்வராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவிக்கு 2 அணியில் இருந்தும் தலா 15 பேர் போட்டியிட்டனர் .

    இது தவிர பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தனியாக ஒருவர் போட்டியிட்டார் . ஆக மொத்தம் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு 31 பேர் அடங்கிய வாக்குச் சீட்டும் 5 பொறுப்புகளுக்கு தனி தனியாக 5 வாக்கு சீட்டுகளும் என ஒவ்வொரு உறுப்பினரும் 20 வாக்குகள் செலுத்த வேண்டி இருப்பதால் வாக்குப்பதிவு செய்ய கூடுதலான இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கு இணையாக கடந்த ஒரு மாதமாகவே வாக்கு கேட்பு நடந்து வந்த நிலையில் இரு பிரிவினரும் பலத்த போட்டியில் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது. புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் மகாசபை கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை திருச்செங்கோட்டில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×