search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை வருகை"

    • உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு.
    • அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    வடவள்ளி,

    கோவை மாவட்ட தி.மு.க செயலா ளர்கள் மாநகர் மாவட்டம் கார்த்திக், தெற்கு மாவட்டம் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டம் தொண்டா முத்தூர் ரவி ஆகியோர் கூட்டாக வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-

    தி.மு.க துணை பொதுச்செ யலாளர் கனிமொழி எம்.பி. நாளை காலை கோவை வருகை தர உள்ளார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே ஒருங்கிணைந்த தி.மு.க நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், பொதுக்குழு உறுப்பினர்கள், நகரகழகம், பகுதி கழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம், ஒன்றிய கழகம் செயலாளர்கள், மண்டல் தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், நிலைகுழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், வட்டக் பொறுப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், தொண்டர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை வருகிறார்.
    • அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.

    கோவை,

    கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகே யன் - கிருபாலினி தம்பதியினரின் மகள் மதுமிதாவின் பூப்புனித நீராட்டு விழா கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில் இன்று மதலை நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை வருகிறார். அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, செங்கோட்டையன், தங்கமணி, முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம். எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்த சாமி, தாமோதரன், கே.ஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி மற்றும் அ.தி.முக பிரமுகர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

    • பகுதி செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இரவு கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    கோவை:

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ந் தேதி கோவை வருகிறார்.

    கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மகள் பூப்புனித நன்னீராட்டு விழா வருகிற 24-ம் தேதி (புதன்கிழமை) சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அன்று மாலை வருகிறார்.

    பின்னர் விழாவில் பங்கேற்று விட்டு அன்றைய தினம் இரவு கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு இன்று கோவை-ஒசூர் ரோடு அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் பகுதி செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில், கோவைக்கு வருகை தரும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மற்றும் பகுதி செயலாளர்கள, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×