search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடியக்காடு"

    • வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார்.
    • பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் சாலை பணிகள் வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் (ஊராட்சி) பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    • வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார்.
    • காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது 2 ஆடுகள் திருட்டு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் வசிப்பவர் ஜான்சுல்தான் (வயது 52).

    இவர் ஆடு வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்து உள்ளார்.

    காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது அதில் 2 ஆடுகள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் ஜான் சுல்தான் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு கோடியக்காடு பகுதி விஜய் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.

    தலைமறைவான கோடியக்காடு அஜீத் (22) என்பவரை தேடி வருகின்றனர்.

    • தற்சமயம் ஒரு டன் உப்பு தரத்திற்கேற்ப ரூ.2500 வரை விற்பனையாகிறது. கடந்த மாதங்களில் மழை அடிக்கடி பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    தற்சமயம் ஒரு டன் உப்பு தரத்திற்கேற்ப ரூ.2500 வரை விற்பனையாகிறது. கடந்த மாதங்களில் மழை அடிக்கடி பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்சமயம் உப்பு உற்பத்திக்கு சூழ்நிலை சாதகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    ×